முஸ்லிமின் வழிமுறை [பாகம்-5]
உறவினர்களுடன் நடந்து கொள்வது.
ஒருமுஸ்லிம் தன் பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்கள் ஆகியோரிடம் எப்படி நடந்து கொள்வானோ அதுபோன்றே தனது இரத்த பந்தமுடையவர்களுடனும் உறவினர்களுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
தன் பெற்றோரிடம் நடந்து கொள்வது போலவே தன் பெற்றோரின் சகோதர, சகோதரிகளுடன் நடந்து கொள்ள வேண்டும். அதாவது தன் தாயின் சகோதரிகளுடனும் தந்தையின் சகோதரிகளுடனும் தாயிடம் நடந்து கொள்வது போலவே நடந்து கொள்ள வேண்டும். தன் தந்தையின் சகோதரர்களுடனும் தாயின் சகோதரர்களுடனும் தந்தையிடம் நடந்து கொள்வது போலவே நடந்து கொள்ள வேண்டும்.
இரத்த பந்தமுடையவர்கள் முஃமின்களாக இருந்தாலும் காஃபிர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் இரத்தபந்தமுடையவர்களாகவே கருத வேண்டும். அவர்களுடன் இணைந்து வாழ்வதும் அவர்களுக்கு நன்மையும் நல்லுபகாரமும் செய்வதும் கடமையாகும்.
அவர்களில் பெரியவர்களைக் கண்ணியப் படுத்தவேண்டும். சிறியவர்களிடம் அன்பு காட்ட வேண்டும். அவர்கள் நோயுற்றால் அவர்களை நோய் விசாரிக்கச் செல்ல வேண்டும். அவர்கள் கஷ்டப்படும்போது அவர்களை ஆதரிக்க வேண்டும். அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் ஆறுதல் சொல்ல வேண்டும். அவர்கள் உறவை முறித்தாலும் அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும். அவர்கள் கடினமாக நடந்து கொண்டாலும் அவன் அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும். இவையனைத்தும் திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன.
அல்லாஹ் கூறுகிறான்: எந்த அல்லாஹ்வின் பெயரைக்கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம்(உரிமைகளைக்) கோருகின்றீர்களோ அந்த அல்லாஹ்வுகே நீங்கள் அஞ்சுங்கள். மேலும் இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள். (4:1)
உறவினர்க்கு அவருடைய உரிமையை வழங்கி விடு. (30:38) நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்தும்படியும் நன்மை செய்யும்படியும் உறவினர்களுக்கு ஈந்துதவும்படியும் கட்டளையிடுகின்றான். (16:90)
அல்லாஹ்வின் தூதரே! என்னை சொர்க்கத்தில் சேர்த்து, நரகத்தை விட்டும் தூரப்படுத்தக்கூடிய ஒரு செயலை எனக்கு அறிவித்துத் தாருங்கள் என நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டபோது, ‘நீ அல்லாஹ்வை வணங்கு. அவனுக்கு இணை எதையும் கற்பிக்காதே. தொழுகையை நிலைநாட்டு. ஸகாத் கொடு. உறவினர்களுடன் இணைந்து வாழு’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஅய்யூப்(ரலி), நூல்:புகாரி, முஸ்லிம்
அபூபக்கருடைய மகள் அஸ்மா(ரலி) அவர்களின் தாயார் இணைவைப்பவராக இருக்கின்ற நிலையில் மக்காவிலிருந்து (மதீனாவுக்கு) வந்திருந்தபோது என் தாயாரிடம் நான் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் அஸ்மா(ரலி) கேட்டபோது, ஆம்! உன் தாயாரிடம் நல்ல முறையில் நடந்து கொள் என அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா (ரலி), நூல்:புகாரி, முஸ்லிம்
அண்டை வீட்டாருடன் நடந்து கொள்வது.
அண்டை வீட்டாருக்குரிய உரிமைகளையும் ஒழுக்கங்களையும் ஒரு முஸ்லிம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவற்றை முழுமையாகப் பேணி நடப்பது ஒவ்வொரு அண்டை வீட்டாரின் மீதும் கடமையாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தையரிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். மேலும் உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள், உறவினரான அண்டைவீட்டார், அந்நியரான அண்டை வீட்டார் ஆகியோருடனும் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். (4:36)
அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் எண்ணுமளவிற்கு. அண்டை வீட்டார் பற்றி ஜிப்ரீல்(அலை) என்னிடம் அறிவுறுத்திக்கொண்டே இருந்தார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்
அல்லாஹ்வையும் மறுமையயும் நம்பிக்கை கொண்டவர் தன் அண்டை வீட்டாரிடம் கண்ணியமாக நடந்து கொள்ளட்டும் எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஷுரைஹ்(ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்.
அண்டை வீட்டாரின் கடமைகள்
1. சொல்லால், செயலால் அவருக்கு தொல்லை தராமலிருப்பது. ‘அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பிக்கை கொண்டவர் தன் அண்டை வீட்டாரிடம் கண்ணியமாக நடந்து கொள்ளட்டும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஷுரைஹ்(ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்
அவன் முஃமினல்லன்! அவன் முஃமினல்லன்! என நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை கூறியபோது, ‘அல்லாஹ்வின் தூதரே! யார் அவன்? எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள்,’எவனுடைய தொல்லைகளிலிருந்து அண்டை வீட்டார் பாதுகாப்பாக இல்லையோ அவனே!’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), புகாரி
2. அவருக்கு நல்லுபகாரம் செய்வது. அதாவது அவருக்கு உதவி தேவைப்பட்டால் உதவி செய்வது, ஒத்துழைப்பது, நோயுற்றால் நோய் விசாரிக்கச் செல்வது, சந்தோஷம் ஏற்பட்டால் வாழ்த்துவது, துன்பம் ஏற்பட்டால் ஆறுதல் சொல்வது, தேவை ஏற்பட்டால் உதவுவது, அவருக்கு முந்திக்கொண்டு ஸலாம் சொல்வது, அவரிடமும் அவரின் குழந்தைகளிடமும் மென்மையாகப் பேசுவது, அவருடைய இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை பயக்கும் விஷயங்களில் அவருக்கு வழிகாட்டுவது, அவருடைய, தவறுகளை மன்னிப்பது, அவருடைய அந்தரங்கங்களைத் துருவிப் பார்க்காமல் இருப்பது, அவர் வீடு கட்டுவதில் அல்லது பாதை அமைப்பதில் அவருக்கு நெருக்கடி கொடுக்காமலிருப்பது, அவருடைய வீட்டுக்கு முன்னால் குப்பைகளை போடுவதன் மூலம் தொந்தரவு கொடுக்காமலிருப்பது, இவையனைத்தும் நமக்கு ஏவப்பட்ட நல்லுபகாரங்களாகும்.
3. நன்மை செய்வதன் மூலம் அவரைக் கண்ணியப்படுத்துவது. ‘முஸ்லிம் பெண்களே! அண்டை வீட்டாருக்குக் கொடுக்கும் பொருள் அற்பமாக இருப்பதாக நினைத்து கொடுக்காமலிருக்க வேண்டாம். சிறிதளவு இறைச்சி ஒட்டிக்கொண்டிருக்கும் எலும்புத் துண்டாயினும் சரியே! என நபி(ஸல்) கூறினர். அறிவிப்பவர்: அபூதர்(ரலி) புகாரி, முஸ்லிம்
அபூதரே! நீ குழம்பு சமைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்தி உன் அண்டைவீட்டாரையும் கவனித்துக்கொள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரு அண்டை வீட்டார் உள்ளனர். நான் யாருக்கு முதலில் அன்பளிப்பு கொடுக்க வேண்டும்? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் யாருடைய வீட்டு வாசல் உனக்கு மிக அருகிலிள்ளதோ அவருக்குக் கொடு என விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: புகாரி.
4. அவரை மதிப்பது, கண்ணியப்படுத்துவது தன் எல்லைச்சுவரில் ஒரு குச்சியை நடுவதைக் கூட தடுக்காமலிருப்பது. அவருடைய இடத்துடன் சேர்ந்திருக்கிற இடத்தை வாடகைக்கு வீடுவதாக இருந்தால் அல்லது விற்பதாக இருந்தால் அவரிடம் ஆலோசிக்காமல், தெரிவிக்காமல் செய்யக் கூடாது
ஏனெனில் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: அண்டை வீட்டுக்காரர் உங்கள்(எல்லைச்) சுவரில் மரக்குச்சியை நடுவதை யாரும் ஆட்சேபிக்க வேண்டாம். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்:புகாரி, முஸ்லிம்
ஒருவரின் தோட்டத்திற்கு பங்குதாரரோ அல்லது அண்டை வீட்டரோ இருந்தால் அவரிடம் தெரிவிக்காமல் அவர் அதை விற்க வேண்டாம். நபிமொழி (ஹாகிம்)
முஸ்லிமுக்குரிய கடமைகள்
ஒரு முஸ்லிம் தன் சகோதர முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் ஒழுக்கங்களையும் நம்ப வேண்டும். இதனை அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய வணக்கமாகவும் அவனை நெருங்குவதற்குரிய வழியாகவும் கருதி முறையாக நிறைவேற்ற வேண்டும். காரணம் இவற்றைப் பேணி நடக்குமாறு அல்லாஹ் கடமையாக்கியிருக்கிறான். அவை வருமாறு:
1. அவரைச் சந்தித்தால் பேச்சை தொடங்கும் முன் அவருக்கு ஸலாம் சொல்ல வேண்டும். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு என்று கூறி அவரிடம் முஸாஃபஹா- கைலாகு செய்ய வேண்டும். இதற்கவர் வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு என்று பதில் கூற வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: உங்களுக்கு(ஸலாம்) எனும் வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையில் அல்லது (குறைந்தபட்சம்) அதை போன்றாவது பதில் வாழ்த்துக் கூறுங்கள். (4:86)
நபி (ஸல்) கூறினார்கள்: வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும் நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும் சிறிய கூட்டம் பெருங்கூட்டத்திற்கும் ஸலாம் சொல்ல வேண்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) புகாரி, முஸ்லிம்
அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் நீ ஸலாம் சொல் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லஹ் பின் அம்ர்(ரலி), நூல்: புகரி, முஸ்லிம்
2. அவர் தும்மி அல்ஹம்துலில்லஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறினால் யர்ஹமுகல்லஹ் (அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக) என்று இவர் கூற வேண்டும். அதற்குப் பதிலாக அவர் யஹ்தீகு முல்லாஹ் வயுஸ்லிஹு பாலகும் (அல்லாஹ் உனக்கு நேர்வழி காட்டுவானாக! உனது நிலையைச் சீர்படுத்துவானாக!) என்று கூற வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்களில் யாரேனும் தும்மி அல்ஹம்து லில்லாஹ் எனக் கூறினால் மற்ற சகோதரர் யார்ஹமுகல்லாஹ் எனக் கூறட்டும். அவர் யார்ஹமுகல்லாஹ் எனக் கூறினால் தும்மியவர் அவருக்காக யஹ்தீகு முல்லஹ் வயுஸ்லிஹு பாலகும் என்று கூறட்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி
நபி(ஸல்) அவர்கள் தும்மினால் தமது கையை அல்லது ஆடையை வாயில் வைத்து சப்தத்தைத் தாழ்த்திக் கொள்வார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்: அபூதாவூத்
3. அவர் நோயுற்றால் அவரை நோய் விசாரிக்கச் சென்று அவர் குணமடைய துஆச் செய்ய வேண்டும்.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு ஐந்து விஷயங்களில் கடமைப்பட்டிருக்கிறான். அவை, ஸலாமுக்கு பதில் சொல்வது, நோய் விசாரிப்பது, ஜனாஸாவில் பங்கேற்பது, விருந்தழைப்பை ஏற்பது, அவர் தும்மி அல்ஹம்து லில்லாஹ் எனக் கூறினால் யர்ஹமுல்லாஹ் எனக் கூறுவது ஆகியவையாகும். (நபிமொழி) புகாரி, முஸ்லிம்
4. அவர் இறந்துவிட்டால் அவரது ஜனாஸாவில் கலந்து கொள்ள வேண்டும்.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு ஐந்து விஷயங்களில் கடமைப்பட்டிருக்கின்றான். அவை, ஸலாமிற்கு பதில் சொல்வது, நோய் விசாரிப்பது, ஜனாஸாவில் கலந்து கொள்வது விருந்தழைப்பை ஏற்பது, தும்மி அல்ஹம்துலில்லாஹ் எனக் கூறினால் யர்ஹமுகல்லாஹ் என்று கூறுவது ஆகியவையாகும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்
5. அவர் ஒரு விஷயத்தில் சத்தியம் செய்தால் அதை நிறை வேற்றுவதற்கு உதவ வேண்டும். சத்தியதை அவர் முறித்து விடாமல் இருப்பதற்காக.
நோயாளியை நோய் விசாரித்தால், ஜனாஸாவில் கலந்து கொள்ளுதல், தும்மியவருக்கு பதில் கூறல், சத்தியம் செய்தவருக்கு அதை நிறைவேற்ற உதவுதல், அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவுதல், விருந்தழைப்பை ஏற்றுக் கொள்லுதல், சலாமிற்குப் பதில் கூறல் ஆகியவற்றை நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏவியுள்ளார்கள் என பர்ராவு பின் ஆஸிஃப்(ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி, முஸ்லிம்
6. ஒரு பொருளில் அல்லது ஒரு காரியத்தில் அறிவுரை வழங்குமாறு கோரினால் அவருக்கு அறிவுரை வழங்க வேண்டும். அதாவது அவ்விஷயத்தில் எது சரியாகவும் நன்மை பயப்பதாகவும் இருப்பதாக தான் கருதுகின்றானோ அதை அவருக்குத் தெளிவுபடுத்த வேண்டும். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தன் சகோதரரிடம் அறிவுரை கேட்டால் அவருக்கு அறிவுரை வழங்கட்டும். (புகாரி)
7. தனக்கு விரும்புவதையே அவருக்கும் விரும்ப வேண்டும். அதுபோல தனக்கு விரும்பாததை அவருக்கும் விரும்பக்கூடாது.
தான் விரும்புவதையே தன் சகோதரனுக்கும் விரும்பாதவரை உங்களில் யாரும் முஃமினாக முடியாது என நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) புகாரி,முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: கட்டடங்களில் ஒரு பகுதி இன்னொரு பகுதியை இறுக்கிப் பிடித்து உதவியாக இருப்பதுபோல ஒரு முஃமின் பிற முஃமினுக்கு உதவியாக இருப்பான். அறிவிப்பவர்: அபூமுஸா(ரலி), புகாரி, முஸ்லிம்
8. அவருக்கு உதவி செய்ய வேண்டும். அவருக்கு உதவி, ஒததாசை தேவைப்படக்கூடிய எந்த இடத்திலும் நிராதரவாக அவரை விட்டுவிடக் கூடாது.
உனது சகோதரன் அநியாயம் செய்பவனாக இருந்தாலும் அநீதியிழைக்கப்பட்டவனாக இருந்தாலும் அவனுக்கு நீ உதவி செய் என நபி(ஸல்) கூறியபோது ஒரு மனிதர், ‘அல்லாஹ்வின் தூதரே! அநீதியிழைக்கப்பட்டவனுக்கு உதவி செய்யலாம். அநியாயம் செய்பவனுக்கு எப்படி உதவுவது?’ என்று கேட்டார். அதற்கவர்கள், ‘அநியாயம் செய்வதிலிருந்து அவனைத் தடுக்க வேண்டும். அதுவே நீ அவனுக்கு உதவுவதாகும்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்
தன் சகோதர முஸ்லிமுடைய மானமரியாதையை யார் காப்பாற்றுகின்றாரோ மறுமையில் அவருடைய முகத்தை அல்லாஹ் நரகிலிருந்து காப்பாற்றுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்தா(ரலி)நூல்: அஹ்மத், திர்மிதி
9. அவருக்கு ஏதேனும் தீங்கிழைப்பதோ துன்பம் கொடுப்பதோ கூடாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமுடைய இரத்தம், பொருள், மானம், மரியாதை ஆகிய அனைத்தும் பிற முஸ்லிமின் மீது ஹாராமாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்:முஸ்லிம்.
எந்த முஸ்லிமும் பிற முஸ்லிமைப் பயமுறுத்தக் கூடாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா(ரலி), நூல்: அபூதாவூத், அஹ்மத்
எவருடைய நாவை விட்டும் கரத்தை விட்டும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்களோ அவரே உண்மையான முஸ்லிம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்
10. அவரிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அவரிடம் பெருமை அடிக்கக் கூடாது. மார்க்கம் அனுமதிக்கின்ற சபையில் அவரை எழுப்பி விட்டு அவருடைய இடத்தில் அமரவும் கூடாது.
அல்லாஹ் கூறுகிறான்: மக்களை விட்டும் உன் முகத்தை (பெருமையோடு) திருப்பாதே! பூமியில் செருக்காய் நடக்காதே! அகந்தையும் ஆணவமும் கொண்ட எவனையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.(31:18)
அல்லாஹ்வுக்காக பணிவை மேற்கொள்ளக்கூடிய அடியாரை அல்லாஹ் உயர்த்தாமலில்லை என நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), முஸ்லிம், திர்மிதி
அதுபோல நபி(ஸல்) அவர்கள் அவனைவரிடமும் பணிவுடன் நடந்து கொள்வார்கள். விதவைகள் மற்றும் ஏழைகளுடன் சென்று அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதைக் குறையாக எண்ணி கர்வம் கொள்ள மாட்டார்கள். ‘உங்களில் ஒருவர் மற்றவரை அவருடைய இடத்தை விட்டும் அகற்றிவிட்டு அவ்விடத்தில் அமர வேண்டாம். மாறாக விசாலமாக இருங்கள்’ எனவும் நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னுஉமர்(ரலி), முஸ்லிம்.
11. மூன்று நாட்களுக்கு மேல் அவரை வெறுக்கக் கூடாது. நபி(ஸல்) கூறினார்கள்: ஒரு முஸ்லிம் தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுக்கக் கூடாது. இருவரும் சந்தித்தால் ஒருவரை ஒருவர் புறக்கணித்துச் செல்லக்கூடாது. அவர்களில் முதலில் ஸலாம் சொல்பவரே சிறந்தவர். அறிவிப்பவர்: அபூஅய்யூப்(ரலி), புகாரி,முஸ்லிம்
…நீங்கள் ஒருவரையொருவர் வெறுத்துச் செல்லாதீர்கள் அல்லாஹ்வின் அடியார்களாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்களாக இருங்கள் என நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரரா(ரலி), -முஸ்லிம்
12. அவரைப் பற்றி புறம் பேசுவது, இழிவாகக் கருதுவது, குறை கூறுவது, அவரைக் கேலி செய்வது, மோசமான பட்டப்பெயர் சூட்டி அழைப்பது, கோள் சொல்வது ஆகிய அனைத்தும் கூடாது.
அல்லாஹ் கூறுகிறான்: உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்து விட்ட தன் சகோதரனின் இறச்சியை உண்ண விரும்புவாரா என்ன? நீங்களே அதை வெறுப்பீர்கள்.(49:12)
‘ஈமான் கொண்டவர்களே! எந்த ஆண்களும் மற்ற எந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒரு வேளை அவர்கள் இவர்களை விடச் சிறந்தவர்களாக இருக்கலாம். எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் பரிகாசம் செய்யவேண்டாம். ஒரு வேளை இவர்கள் அவர்களை விடச் சிறந்தவர்களாக இருக்கலாம். நீங்கள் ஒருவரையொருவர் குத்திப் பேசாதீர்கள். ஒருவருக்கொருவர் மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள். இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமான பெயர்களைச் சூட்டுவது மிகவும் கெட்ட விஷயமாகும். எவர்கள் இந்த நடத்தையைக் கைவிடவில்லையோ அவர்கள்தாம் கொடுமைக்காரர்கள். (49:11)
புறம்பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? என நபி(ஸல்) அவர்கள் கேட்டதும் ‘அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிந்தவர்கள்’ என நபித்தோழர்கள் கூறினர். உடனே நபி(ஸல்)அவர்கள் (புறம் பேசுதல் என்பது) ‘உன் சகோதரனைப் பற்றி அவன் விரும்பாததை நீ கூறுவதாகும்’ என்று கூறினார்கள். அப்போது நான் கூறும் விஷயம் என் சகோதரனிடததில் இருந்தாலுமா? என்று கேட்கப்பட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், நீ கூறும் விஷயம் உன் சகோதரனிடத்தில் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசி விட்டாய்! நீ கூறும் விஷயம் உன் சகோதரனிடத்தில் இல்லையென்றால் நீ அவனைப் பற்றி அவதூறு கூறிவிட்டாய் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்:முஸ்லிம்.
கோள் சொல்லித் திரிபவன் சுவர்க்கத்தில் நுழையமாட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைஃபா(ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்.
அவரைத் திட்டக் கூடாது. அவன் இறந்த பிறகும் சரியே. நபி(ஸல்) கூறினார்கள்: ஒரு முஸ்லிமைத் திட்டுவது பாவமாகும். அவனைக் கொலை செய்வதோ இறை நிராகரிப்பாகும். அறிவிப்பவர்: இப்னு முஸ்வூத்(ரலி) புகாரி, முஸ்லிம்.
இறந்தவர்களை திட்டாதீர்கள். ஏனெனில் அவர்கள் செய்ததற்கான கூலியை அடைந்து விட்டார்கள் (நபிமொழி) அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), புகாரி, முஸ்லிம்
14. அவர் மீது பொறாமைப்படுவது, குரோதம் கொள்வது, அவரைப் பற்றி தவறாக எண்ணுவது, துருவி துருவி ஆராய்வது ஆகியவை கூடாது.
அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கை கொண்டவர்களே! அதிகமாக சந்தேகம் கொள்வதைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன. மேலும் (பிறரைத்) துருவித்துருவி ஆராயாதீர்கள். (49:12)
15. அவரை ஏமாற்றுவோ அவருக்கு துரோகம் செய்வதோ கூடாது. அவரைப் பொய்ப்படுத்தவும் கூடாது.
அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு (அவர்கள் குற்றம் புரியாதிருக்கவே எவர்கள் துன்பம் அளிக்கின்றார்களோ அவர்கள் ஒரு மாபெரும் அவதூரையும் வெளிப்படையான பாவத்தின் விளைவையும் தம்மீது சுமந்து கொள்கிறார்கள். (33:58)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு பண்புகள் எவனிடத்தில் இருக்கின்றனவோ அவன் வடிகட்டிய நயவஞ்சகனாவான். எவனிடத்தில் அந்த நான்கு பண்புகளில் ஏதேனும் ஒரு பண்பு இருக்கின்றதோ அவன் அதைக் கைவிடாதவரை நயவஞ்சகத்தினுடைய ஒரு பண்பு அவனிடத்தில் இருந்து கொண்டே இருக்கும்.(அவை வருமாறு) அவனை நம்பினால் துரோகம் செய்வான். பேசினால் பொய்யுரைப்பான், ஒப்பந்தம் செய்தால் அதற்கு மோசடி செய்வான், விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்.
16. அவரிடம் அழகிய முறையில் நடந்துகொள்ள வேண்டும். அதாவது அவருக்கு நன்மை செய்ய வேண்டும். தீமைசெய்யக் கூடாது. மலர்ந்த முகத்துடன் அவரைச் சந்திக்க வேண்டும். அவர் செயயும் நல்லுபகாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவருடைய தவறுகளை மன்னிக்க வேண்டும். அவரால் முடியாத காரியங்களைச் செய்யும்படி ஏவக்கூடாது
நபி(ஸல்) அவர்கள் கூறினாகள்: நீ எங்கிருந்த போதிலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள். தீமை செய்தால் தொடர்ந்து நன்மை செய்துவிடு. அது அத்தீமையைத் துடைத்துவிடும். மக்களிடம் நல்லமுறையில் நடந்து கொள். அறிவிப்பவர்: அபூதர்(ரலி), நூல்: திர்மிதி, ஹாகிம்.
17. அவர் தன்னை விட மூத்தவனாக இருந்தால் அவரிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். சிறியவராக இருந்தால் அன்புடன் நடந்து கொள்ள்வேண்டும்.
பெரியவர்களை மதிக்காதவர்களும் சிறியவர்களுக்கு இரக்கம் காட்டாதவர்களும் நம்மைச் சார்ந்தவர்களல்ல என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: அபூதாவூத், திர்மிதி
காஃபிர்களுடன் நடந்து கொள்ளும் முறை
இஸ்லாமிய மார்க்கத்தைத் தவிர ஏனைய மதங்களும் இஸங்களும் அசத்தியமானவை. அவற்றைப் பின்பற்றக்கூடியவர்கள் காஃபிர்களாவர். இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம். அதை பின்பற்றக்கூடியவர்கள் முஃமின்கள், முஸ்லிம்களாவர்.
அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக இஸ்லாம்தான் அல்லாஹ்விடம் (ஒப்புக் கொள்ளப்பட்ட) மார்க்கமாகும். (அல்குர்ஆன்: 3:19)
‘இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தை யாரேனும் மேற்கொள்ள விரும்பினால் அவனிடமிருந்து அது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் மறுமையில் அவன் நஷ்டமடைந்தவர்களில் ஒருவனாக இருப்பான். (அல்குர்ஆன்: 3:85)
இதனால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத அனைவருமே காஃபிர்கள் என்று ஒரு முஸ்லிம் கருத வேண்டும். காஃபிருடன் பின்வரும் ஒழுக்கங்களைப் பேணி நடக்க வேண்டும்.
1. அவனுடைய நிராகரிப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாது. அதைப் பொருந்திக் கொள்ளவும் கூடாது. ஏனெனில் இறைநிராகரிப்பை பொருந்திக் கொள்வதும் இறைநிராகரிப்பாகும்.
2. அவனை வெறுக்க வேண்டும். அல்லாஹ் அவனை வெறுப்பதனால். ஏனெனில் விருப்பும் வெறுப்பும் அல்லாஹ்வுக்காகவே இருக்க வேண்டும். தன்னை நிராகரிக்கின்றான் என்பதற்காக அல்லாஹ் அவனை வெறுக்கும் போதெல்லாம் அல்லாஹ் வெறுக்கிறான் என்பதற்காக ஒரு முஸ்லிமும் அவனை வெறுக்க வேண்டும்.
3. அவனை நேசிப்பதும் அவனிடம் நட்பு கொள்வதும் கூடாது. எனெனில் அல்லாஹ் கூறுகிறான்: இறைநம்பிக்கையாளர்கள் (தங்களைப்போன்ற) இறைநம்பிக்கையாளர்களை விடுத்து இறைநிராகரிப்போரை (ஒருபோதும் தம்) நேசர்களாய் ஆதரவாளர்களாய் ஆக்கிக் கொள்ள வேண்டாம். (அல்குர்ஆன்: 3:28)
அல்லாஹ்வின் மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை வைத்திற்கும் மக்கள், அல்லாஹ்வையும் அவன் தூதரையும் எதிர்ப்பவர்கள் மீது அன்பு செலுத்துவதை (நபியே!) நீர் காணமாட்டீர், அத்தகையோர் அவர்களின் தந்தையராயினும் அல்லது அவர்களின் தனயர்களாயினும் அல்லது அவர்களுடைய சகோதரர்களாயினும் அல்லது அவர்களுடைய குடும்பத்தினராயினும் சரியே! (அல்குர்ஆன்: 58:22)
4. காஃபிர் முஸ்லிமை எதிர்த்துப் போராடக் கூடியவனாக இல்லையென்றால் முஸ்லிம் அவனிடம் நீதமாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வதுடன் அவனுக்கு நன்மையே செய்ய வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: தீன் (இறைமார்க்கம்) தொடர்பான விஷயத்தில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ, உங்களை உங்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றவில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும் நீதியுடனும் நடப்பதை அல்லாஹ் தடுக்கவில்லை. திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான். (அல்குர்ஆன்: 60:8)
5. பொதுவாக எல்லோரையும் போலவே அவனிடமும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். உதாரணமாக அவனுக்குத் பசித்தால் உணவளிக்க வேண்டும். அவனுக்குத் தாகம் ஏற்பட்டால் தண்ணீர் கொடுக்க வேண்டும் அவன் நோயுற்றால் மருத்துவம் செய்ய வேண்டும். அல்லது அழிவிலிருந்து அவனைக் காப்பாற்ற வேண்டும். மேலும் அவனுக்கு ஏற்படும் துன்பம், தொல்லைகளை நீக்க வேண்டும்.
ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பூமியிலுள்ளவர்களுக்கு நீ இரக்கம் காட்டு. வானத்திலிள்ளவர்கள் உனக்கு இரக்கம் காட்டுவார்கள். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத்(ரழி) நூல்: தப்ரானி, ஹாகிம்
6. அவன் முஸ்லிமுடன் போரிடக்கூடியவனாக இல்லையென்றால் அவனுடைய பொருளுக்கும் மானமரியாதைக்கும் பங்கம் விளைவிக்கக் கூடாது.அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். என் அடியார்களே! அநியாயம் செய்வதை எனக்கு நானே தடை செய்துள்ளேன். உங்களுக்கு இடையேயும் இதை தடை செய்திருக்கிறேன் எனவே உங்களில் ஒருவர் மற்றவருக்கு அநியாயம் செய்ய வேண்டாம். அறிவிப்பவர்: அபூதார்(ரலி), நூல்: முஸ்லிம்
7. அவனுக்கு அன்பளிப்பு வழங்குவதும் அவன் தரும் அன்பளிப்பை ஏற்றுக் கொள்வதும், அவன் யூத, கிறிஸ்தவனாக இருந்தால் அவனது உணவை உண்பதும் ஆகுமானதே.
‘வேதம் கொடுக்கப்பட்டவர்களின் உணவு உங்களுக்கு ஆகுமாக்கட்டிருக்கின்றது’ என அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன்: 5:5)
நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனுடைய விருந்திற்கு அழைக்கப்பட்டார்கள். அந்த அழைப்பை ஏற்று அவர்கள் தந்த உணவை உண்டிருக்கிறார்கள்.
8. முஃமினான பெண்ணை அவனுக்கு மணமுடித்துக் கொடுக்கக் கூடாது. ஆனால் வேதம் கொடுக்கப்பட்டவர்களின் பெண்களை மணந்து கொள்வது கூடும்.
அல்லாஹ் கூறுகிறான்: இறைவனுக்கு இணைவைக்கும் பெண்களை அவர்கள் ஈமான் கொள்ளும்வரை ஒரு போதும் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். (அல்குர்ஆன்: 2:221)
‘முஃமினான நல்லொழுக்கமுடைய பெண்களையும் உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்ட நல்லொழுக்கமுள்ள பெண்களையும் விலைப் பெண்டிராகவோ ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது அவர்களுக்குரிய மஹ்ரைக் கொடுத்து மணமுடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது’. (அல்குர்ஆன்: 5:5)
9. அவன் தும்மி அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறினால் அவனுக்காக, யஹ்தீகுமுல்லாஹ் வயுஸ்லிஹீ பாலகும் (அல்லாஹ் உனக்கு நேர்வழி காட்டி உனது நிலையை சீர்படுத்துவனாக) என்று கூற வேண்டும்.
ஏனென்றால் நபி(ஸல்)அவர்களிடம் யூதர்கள் தும்பும் போது அல்ஹம்து லில்லாஹ் என்று கூறுவார்கள் – யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக) என நபி(ஸல்) அவர்கள் தங்களுக்காக கூற வேண்டுமென எதிர் பார்த்தவாறு. ஆனால் நபி(ஸல்) அவர்களோ யஹ்தீகுமுல்லாஹ் வயுஸ்லிஹீ பாலகும் என்றே கூறுவார்கள்.
10. அவனுக்கு முந்திக்கொண்டு ஸலாம் சொல்லக் கூடாது. அவன் ஸலாம் கூறினால் பதில் கூறலாம்.
அல்லாஹ் கூறுகிறான்: உங்களுக்கு (ஸலாம்) என்னும் வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையில் அல்லது (குறைந்தபட்சம்) அதைப் போன்றாவது பதில் வாழ்த்துக் கூறுங்கள். (அல்குர்ஆன்: 4:86)
வேதக்காரர்கள் உங்களுக்கு ஸலாம் சொன்னால் வ அலைக்கும் என்று கூறுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரழி) -புகாரி,முஸ்லிம்.
(குறிப்பு:- வேதக்காரர்கள் முஸ்லிம்களுக்கு ஸலாம் கூறினால் அஸ்ஸாமு அலைக்கும் (உங்கள் மீது நாசம் உண்டாகட்டும்) என்று கூறுவதுண்டு. அப்படிக் கூறும் போது மட்டும் வ அலைக்கும் (உங்கள் மீதும் நாசம் உண்டாகட்டும்) என்று பதில் கூற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நபிமொழியில் ஆதாரம் உண்டு)
11. அவனைக் கடந்து செல்லும்போது பாதையின் ஒரத்திற்கு அவனைத் தள்ள வேண்டும்.
ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூத, கிறிஸ்தவர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் சொல்லாதீர்கள். அவர்களை நீங்கள் ஒரு பாதையில் சந்தித்தால் பாதையின் ஒரத்திற்கு அவர்களைத் தள்ளுங்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்
12. (கலாச்சாரத்திலும் பழக்கவழக்கங்களிலும்) அவர்களுக்கு மாறு செய்ய வேண்டும். அவர்களுக்கு ஒப்பாக நடக்கக்கூடாது.
நபி(ஸல்) கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தினருக்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அவர்களைச் சார்ந்தவர்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி), நூல்: அபூதாவூது.
நன்றி: இஸ்லாம்குரல்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக