வெள்ளி, 30 நவம்பர், 2012




இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும்


அல்லாஹுதஆலா உலகில் அனைத்து படைப்புகளையும் இரட்டை இரட்டையாக படைத்துள்ளான். அதே போன்று ஆணையும், பெண்ணையும் படைத்து அவர்களை திருமணம் என்ற அமைப்பில் ஜோடி சேர்த்து ஒருவருக்கு ஒருவர் துணையாக வாழ வைக்கின்றான். அந்த திருமணங்கள் அல்லாஹ்வினதும், ரஸுலினதும் கட்டளை பிரகாரம் நடத்தப்பட வேண்டும் என்று கட்டளையும் இடுகின்றான். அல்லாஹ்வினதும், ரஸுலினதும் கட்டளை பிரகாரம் செய்யப்படும் திருமணங்களுக்கு ரஹ்மத்தும், பரக்கத்தும் நிச்சயமாக கிடைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

ஆனால் இன்று எமது முஸ்லிம் சமுதாயத்தில் திருமணம் என்ற விஷயத்தை பார்க்கும் போது எல்லாம் தலைகீழாக உள்ளதை காண்கின்றோம். பெரும்பாலான முஸ்லிம்கள் அதாவது ஆலிம்கள் முதல் ஆபிதுகள் வரை, அறிஞர்கள் முதல் அறிவிலிகள் வரை, பாமரர்கள் முதல் பாவிகள் வரை அனைவரிடம் திருமணம் என்ற இந்த ஸுன்னத்தான அமலை பார்க்கும் போது அல்லாஹ்வினதும், ரஸுலினதும் திருப்பொருத்தத்தை பெறுவதற்கு பதிலாக இப்லீசினதும் யூத நஸாராக்களினதும் பொருத்தத்தை பெறக்கூடியதையே காணக்கூடியதாக உள்ளது.

முதலில் திருமணம் செய்யப் போகும் மணமகன், மணமகள் அல்லது மணமக்களின் பெற்றோர்கள் இவர்களின் எண்ணங்களை (நிய்யத்தை) பார்க்கும் போது, உலக ஆசையும் உலக ஆதாயமுமே. முக்கிய நோக்கமாக உள்ளது.

                                                                           
ஆண் அல்லது மணமகனின் நோக்கம்

இன்று சில ஆண்களுடைய நோக்கம் செல்வ செழிப்புள்ள, காணி, சீதனம், சொத்து, அழகுள்ள பெண்களை திருமணம் செய்யவேண்டும். அது மட்டுமல்ல பெண் வீட்டாரிடம் கடை அல்லது வாகனம், போன்றவைகளை கேட்டு பெற வேண்டும். மேலும் கடை அல்லது வீடு, காணி போன்றவைகளை தன் பெயரில் எழுதி கேட்க வேண்டும். இது போன்ற ஹுப்புத் துன்யாவின் எண்ணத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் எதை விரும்ப சொன்னார்களோ அதை விட்டு விட்டு இப்லீஸ் எதை விரும்புகிறானோ அதையே இவர்கள் விரும்புகிறார்கள்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:-

நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.
1. அவளது செல்வத்திற்காக.
2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளது அழகிற்காக.   ​
​4. அவளது மார்க்க (நல்லொழுக்கத்திற்காக)

​ஆகவே மார்க்க  (நல்லொழுக்க)ம்   உடையவளை  (மணந்து)  வெற்றி  அடைந்து  கொள்! (இல்லையேல்)  உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!

அறிவிப்பவர்: அபூஹரைரா (ரலியல்லாஹு அன்ஹு)  
நூல் : ஸஹிஹுல் புகாரி – 5090

ஒரு பெண்ணிடம் எதிர்ப்பார்க்க வேண்டியது மார்க்க பக்திதான், மார்க்க பற்றுள்ள பெண்ணை திருமணம் செய்வோருக்கு இம்மை, மறுமை இரண்டிலும் வெற்றி கிடைக்கும். இதனால் தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் வெற்றிக்கொள் என்று கூறியுள்ளார்கள். அல்லாஹ்வையும், ரஸுலையும் நேசிக்கக் கூடிய மார்க்க பக்தியுள்ள பெண்ணிடம் நற்குணம் இருக்கும், தக்வா இருக்கும், நற்பண்புகள் இருக்கும். அதனால்தான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மார்க்கப்பற்றுள்ள பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் படி கூறினார்கள்.

ஆனால் இன்று அனேகமான ஆண்கள் குறிப்பாக தங்களை முஸ்லிம் என்று கூறிக்கொள்பவர்கள், முஃமின் என்று கூறிக்கொள்பவர்கள், மௌலவி அல்லது ஆலிம் என்று தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளும் சிலர், ஆஷிகே ரஸுல் என்று தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் சிலர், ஆபிதுகள் என்று கூறிக்கொள்ளும் சிலர், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்காக உயிரை தியாகம் செய்வோம். என்று கூறிக்கொள்பவர்கள் கூட திருமண விஷயத்தில் இவர்களை பார்க்கும் பொழுது, இவர் ஒரு முஸ்லிமா? என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒரு பெண்ணிடம் எதை எதிர்பார்க்க வேண்டும் என்று கூறினார்களோ, அதை பரிபூரணமாக உதாசீனம் செய்துவிட்டு, நாயகம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் எதை எதிர்ப்பார்க்க கூடாது என்று கூறினார்களோ, அதை இவர்கள் எதிர்ப்பார்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் வார்த்தையை இவர்கள் புறக்கணித்து விட்டு, இப்லீஸின் வார்த்தைக்கு இவர்கள் கட்டுப்பட்டு நடக்கிறார்கள்.

மேலும் அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் :

பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை மகிழ்ச்சியாக நீங்கள் கொடுத்துவிடுங்கள்.  .................அல் குர்ஆன் (4:4)

என்று கூறுகின்றான். ஆனால் இன்று சிலர் மகிழ்ச்சியாக மஹரை கொடுப்பதற்கு பதிலாக மகிழ்ச்சியாக சீதனம் வாங்குவதையே காணக்கூடியதாக உள்ளது. இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்வினதும், ரஸுலினதும் கட்டளைக்கு மாறு செய்து விட்டு தங்களை முஸ்லிம்கள் என்றும் முஃமின்கள் என்றும் கூறி திரிவதை பார்க்கும் போது வேடிக்கையாகவும், கவலையாகவும் உள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் இஸ்லாமிய திருமணங்கள் அல்லாஹ்வினதும், ரஸுலினதும் கட்டளைக்கு மாற்றமாக நடைபெறுவதினால் இன்று குடும்பங்களில் பரக்கத் இல்லை, ஒற்றுமை இல்லை, புரிந்துணர்வு இல்லை அதுமட்டுமல்ல காதி நீதிமன்றங்களில் விவாகரத்து (Divorce) வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து மலைப்போல் உள்ளது. இவைகளுக்கு காரணம் அல்லாஹ்வும், ரஸுலும் ஏவியவைகள் புறக்கணிக்கப்படுகின்றது. அல்லாஹ்வும், ரஸுலும் விலக்கியவைகள் எடுத்து நடத்தப்படுகின்றது. திருமணங்களை பள்ளிவாசல்களில் வைக்க வேண்டும் என்பது ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் கட்டளை. ஆனால் இன்று முஸ்லிம்கள் திருமணங்களை வைப்பது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும், கேளிக்கை விடுதிகளிலும். திருமணங்களில் ஆடல், பாடல், ஆண், பெண் கலத்தல் போன்றவை மார்க்கத்தில் விலக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய திருமணங்களில் இவை அனைத்துமே உள்ளது.

இன்று நாம் காதுகளினால் கேட்கிறோம், 7 வருடம் மத்ரஸாவில் ஓதி மௌலவி பட்டம் பெற்ற மவ்லவிமார்கள் ஒரு சிலர் வெளிநாடுகளில் தொழில் செய்துக்கொண்டு அவர்கள் மணமகள் தேடுகின்றார்கள், என்ன நிபந்தனையின் பிரகாரம் என்றால், மார்க்கப்பற்று அல்லது ஆஷிகே ரஸுல் இதுபோன்ற இஸ்லாமிய நிபந்தனையின் பிரகாரம் அல்ல மாறாக மணமகள் அபாயா அணிய கூடாது, தலையில் முக்காடு போட கூடாது இது போன்ற நிபந்தனையுடன் மணமகள் தேடுகிறார்கள். இவர்களை மௌலவி என்று சொல்வதா அல்லது வேறு பெயர்கொண்டு அழைப்பதா என்று நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள். ஆலிமின் நிலைமை இப்படி இருக்கும் போது பாமரனின் நிலைமை எப்படி இருக்கும்? அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்! இப்படி ஏராளமாக கூறிக்கொண்டே போகலாம். இன்று அனேகமானவர்கள் திருமணம் என்ற ஸுன்னத்தை செய்ய போய் ஹராத்தை செய்வதையே காணக்கூடியதாக உள்ளது.

                                                           
 பெண்  அல்லது  மணமகளின்  நோக்கம்

இன்றைய சில பெண்களின் எண்ணத்தை, எதிர்ப்பார்ப்பை பார்க்கும் போது அவர்களுடைய எண்ணங்களும், எதிர்ப்பார்புகளும் மார்க்க அடிப்படைக்கு மாற்றமாகவே இருக்கிறது. மார்க்கப் பற்றுள்ள, நற்குணமுள்ள, நற்பண்புள்ள, அறிவுள்ள ஆண்களை விரும்புவதற்கு பதிலாக பணக்கார, அழகான, நாகரீக மோகமுள்ள ஆண்களையே விரும்புகிறார்கள். இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால், உலக ஆசையில் மூழ்கி (ஹுப்புத் துன்யா) வில் வாழ்கிறார்கள்.

உள்ளத்தில் அல்லாஹ்வையும், ரஸுலையும் வைப்பதற்கு பதிலாக உலகத்தை வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட பெண்கள் எதிர்ப்பார்ப்பது திருமணம் முடிந்து மேற்கத்தேய நாடுகளில் போய் நாகரீக வாழ்க்கை வாழ வேண்டும், பணக்காரியாக வாழவேண்டும் இது போன்ற ஆடம்பர வாழ்க்கையையே எதிர்பார்க்கிறார்கள். இப்படி இவர்கள் வாழும் போது திடீரென ஒரு சிறு வறுமை ஏற்பட்டவுடனேயே இவர்களுடைய வாழ்க்கை தலாக்கில் (விவாகரத்தில்) போய் முடிகிறது.


 மணமக்களின்  பெற்றோர்களின்  நோக்க​ம்

அடுத்து நாம் பார்க்க வேண்டியது பெற்றோர்களின் நோக்கங்களை. இன்றைய காலக்கட்டத்தில் சில பெற்றோர்களின் நிலை மிக மோசமாக உள்ளது. சில பெற்றோர்களின் எண்ணத்தை பார்க்கும் பொழுது, பிள்ளைகளின் நல்லெண்ணத்தை விடவும், நற்குணத்தை விடவும் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார்கள்.

வியாபாரம் செய்வதை போன்று இவர்கள் திருமண பேச்சை ஆரம்பித்தால் முதலில் நாவு கூசாமல் கேட்பது கொடுக்கல் வாங்கல் என்னவென்று. மணமகனின் பெற்றோரை எடுத்துக்கொண்டால் இவர்களின் முதல் நோக்கம் அல்லது எதிர்பார்ப்பு சீதனம், காணி, வீடு இவை போன்றவைகள் எங்கு கூடுதலாக கிடைக்குமோ அங்கு தான் திருமணம் செய்து வைப்பார்கள் (இந்துக்களை போன்று). மணமகள் 100% மார்க்கப்பற்றுள்ள பெண்ணாக இருந்தாலும் கூட, அந்த பெண் ஏழையாக இருந்தால் அதை ஒதுக்கி தள்ளிவிடுவார்கள். அவர்களுக்கு தேவை அழிய கூடிய சொத்து, செல்வங்கள்தான்.

இன்னும் சில பெற்றோர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பார்ப்பது அந்தஸ்து, குலம் போன்றவைகளை. தன் மகன் டாக்டராக இருந்தால் அதைப்போன்ற டாக்டர் அல்லது இன்ஜினியர் பெண் அல்லது அதையும் விட உயர்ந்த பணக்கார குடும்பத்து பெண். இதுபோன்ற வகையில் தான் மணமகள் தேடுவார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள், இன்ன ஹாஜியாருடைய மகன் இன்ன ஹாஜியாரின் மகளை முடித்துள்ளார் என்ற பெயருக்காக அல்லது அந்த ஆலிம், இந்த மவ்லவி எனது மருமகன் என்ற பெயருக்காகவும், புகழுக்காகவும் மணமுடித்து வைப்பார்கள். இவர்கள் தங்களின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக தன்னுடைய மகன் அல்லது மகளின் சம்மதத்தை கூட கேட்பதில்லை. இவர்கள் யாரை விரும்பி திருமணம் செய்ய சொல்கிறார்களோ, அவர்களையே இவர்களின் பிள்ளைகள் திருமணம் செய்யவேண்டும். அப்படிப்பட்ட பிர்அவ்னின் குணத்தை ஒத்தவர்களாக சில பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

அல்லாஹ் அல் குர்ஆனில் கூறும்போது:
“முஃமீன்களே! (உங்களுடைய உறவு வழிப்) பெண்களை (அவர்களின்) விருப்பமின்றி (நிர்பந்தமாக) நீங்கள் அனந்தரமாக்கி கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல”  ........அல் குர்ஆன் - 4:19


மேலும் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

கன்னி கழிந்த பெண்ணை, அவளது (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒரு முறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். என்று சொன்னார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதியைத் தெரிந்துக்கொள்வது) என்று கேட்டார்கள். (அதற்கு) நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள், அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்) என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ​அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு   நூல் : ஸஹிஹுல் புகாரி 5136


​இன்னும்
கன்னி கழிந்த பெண்னான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு இதில் விருப்பம் இருக்கவில்லை. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்களிடம் போய் என் விருப்பத்தை சொன்னேன். அத் திருமணத்தை நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் ரத்து செய்தார்கள்.

​அறிவிப்பவர் : கன்ஸா பின்த் கிதாம் அல் அன்சாரியா (ரலியல்லாஹு அன்ஹா)  நூல் : ஸஹிஹுல் புகாரி 5138


​மணமக்களிடம் சம்மதம் கேட்ட பிறகே திருமணத்தை நடாத்தி வைக்க வேண்டும் என்பது அல்லாஹ்வினதும் ரசூலினதும் கட்டளை. மணமக்களின் அனுமதி இல்லாமல், பெற்றோர்கள் தங்களில் சுய விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து வைப்பது இஸ்லாமிய வழிமுறையல்ல. இப்படிப்பட்ட பெற்றோர்கள் தன் மகன் அல்லது மகளின் எதிர்கால வாழ்க்கை நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று சிந்திப்பதில்லை. இவர்கள் தங்களுக்கு வரப்போகும் மருமகன் அல்லது மருமகள் மார்க்கப்பற்று, நற்குணம், ஒழுக்கம் உள்ளவராக இருக்கிறாரா? இல்லையா? என்று பார்ப்பதில்லை மாறாக இவர்கள் பணத்தையும், பெயரையும், புகழையும் மாத்திரமே எதிர்பார்த்து பிள்ளைகளின் வாழ்கையை நாசமாக்குகிறார்கள்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள் அல்லாஹ்வுக்கும், ரஸுலுக்காகவும் வாழ்வதில்லை இவர்கள் வாழ்வது ஊருக்கும், உலகுக்காகவும், மருமகன் அல்லது மருமகள் ஏழையாக இருக்கிறாரே, பெயர், புகழ் அற்றவராக இருக்கிறாரே, சொந்தகடை இல்லாத சாதாரண தொழிலில் உள்ளவரே, உலக மக்கள் என்ன சொல்லுவார்கள், உறவினர்கள் என்ன சொல்லுவார்கள். என்று ஊரு, உலகுக்காக வாழ்ந்து தன் வாழ்க்கையையும் நாசமாக்கி தன் மகனின் வாழ்க்கையையும் நாசமாக்கி அல்லது தன் மகளின் வாழ்க்கையை நாசமாக்குகின்றார்கள்இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: மனிதனை இறைவனிடமிருந்து பிரிக்கக்கூடியது நான்கு, அவையாவன: உலகம், மக்கள், உள்ளம், ஷைத்தான். இந்த நான்கிற்கு இவர்கள் வழிபட்டு வாழ்வதினால் தான் இறைவனுடைய ரஹ்மத்தை விட்டும், பரக்கத்தை விட்டும் தூரமாகுகிறார்கள்.


மேலும் சில பெற்றோர்கள் தன் மகன் அல்லது மகளை ஏழைகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு விரும்புவதில்லை. அதற்கு அவர்கள் கூறும் காரணம் எனது மகன் அல்லது மகள் நாளைக்கு கஷ்டப்படக்கூடாது, அவர்கள் செல்வ செழிப்போடு வாழவேண்டும் அதனால்தான் வசதி படைத்த மணமகன் அல்லது மணமகளை தேடுகிறோம் என்று, இப்படி இவர்கள் கூறுவதற்கு காரணம் இவர்களின் ஈமானின் பலஹீனம், ஏனெனில் அல்லாஹ்வின் மீதும், ரஸுளின் மீதும் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை.


அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்:
இன்னும் உங்களில் (ஆணோ, பெண்ணோ) திருமணமில்லாதவர்களுக்கும், உங்களுடைய அடிமை ஆண்கள், அடிமைப் பெண்களிலிருந்து நல்லவர்களுக்கும் நீங்கள் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழையாக இருந்தால் அல்லாஹ் தன் கருணையினால் அவர்களை சீமான்களாக்கி வைப்பான். அல்லாஹ் விசாலமான (கொடையுடைய) வன் முற்றும் அறிந்தவன்.  .................அல் குர்ஆன் - 24:32


அல்லாஹ்வின் வார்த்தை மீது இவர்களுக்கு நம்பிக்கை இல்லாததனால்தான் இவர்கள் இப்படிப்பட்ட வார்த்தைகளை பேசுகிறார்கள். இப்படிப்பட்ட பெற்றோர்கள் அடுத்த வினாடி என்ன நடக்கும் என்பதை சிந்திக்க தவறி விட்டார்கள். இரவில் பணக்காரனாக இருந்தவர்கள் எத்தனையோ பேர் காலையில் பிச்சைக்காரனாகவும், அனாதையாகவும், விதவையாகவும் மாறிய சுனாமி என்ற சம்பவத்தை நாம் அனைவரும் கண்களினால் பார்த்தோம், காதுகளினால் கேட்டோம் இதுதான் வாழ்க்கை.

அல்லாஹ்வையும், ரஸுலையும் நம்பியவர்கள் உலகுக்காக வாழமாட்டார்கள், ஊருக்காக வாழமாட்டார்கள், உறவினருக்காக வாழமாட்டார்கள், குடும்பத்தினருக்காக வாழமாட்டார்கள், நண்பர்களுக்காக வாழமாட்டார்கள், பணத்துக்காக வாழமாட்டார்கள், புகழுக்காக வாழமாட்டார்கள், பட்டம், பதவிக்காக வாழமாட்டார்கள், ஏன் தனக்காக கூட வாழமாட்டார்கள். அவர்கள் வாழ்வதெல்லாம் அல்லாஹ்வுக்காகவும், ரஸுலுக்காக மட்டும் தான். அவர்கள் தான் உண்மையான முஃமின்கள். இப்படிப்பட்ட பெற்றோர்களை நாம் இதுவரை கண்டதில்லை. ஆனால் அப்படிப்பட்ட உண்மையான முஃமின்களாகிய இளைஞர், யுவதிகளை கண்டுள்ளோம், பழகியுள்ளோம், பேசியுள்ளோம் அல்ஹம்துலில்லாஹ்!



முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும்

முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும் அல்லாஹ் சுவனபதிகளை வாக்களித்துள்ளான்- அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அந்த) நித்திய சுவனபதிகளில் அவர்களுக்கு உன்னத மாளிகைகள் உண்டு - அல்லாஹ்வின் திருப்தி தான் மிகப்பெரியது - அதுதான் மகத்தான வெற்றியாகும். அல் குர்ஆன் - ​ தவ்பா – 72

முஃமினான ஆண்களும், பெண்களும் எப்படிப்பட்டவர்கள் என்றால் அவர்கள் வாழ்வது அல்லாஹ்வுக்காகவும், ரஸுலுக்காகவும் தான். அவர்கள் தங்களின் வாழ்கையை அல்லாஹ்வுக்கும், ரஸுலுக்காகவும் தியாகம் செய்வார்கள். திருமணம் என்ற பேச்சு வந்தவுடன் அவர்கள், மணமகன் அல்லது மணமகளின் வயதை பார்க்க மாட்டார்கள், பணத்தை பார்க்க மாட்டார்கள், அழகை பார்க்கமாட்டார்கள், தொழிலை பார்க்கமாட்டார்கள், அந்தஸ்த்தை பார்க்கமாட்டார்கள், அவர்கள் பார்ப்பதெல்லாம் மார்க்கப்பற்றையும், நற்குணத்தை மாத்திரம் தான். இப்படிப்பட்ட முஃமினான 18 வயதுடைய இளைஞன் அல்லது யுவதியிடம் இருக்கக்கூடிய அறிவு, பக்குவம், நற்குணம் 50, 60, 70 வயதை தாண்டிய பெற்றோர்களிடம் நீங்கள் காணமுடியாது.

அண்மையில் இலங்கையில், கொழும்பில் நடந்த சம்பவங்கள் சிறந்த எடுத்துக்காட்டு. 25 வயது வாலிபர் ஒருவர் 40 வயது கன்னிப் பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர் முடித்தது பணக்கார பெண்ணை அல்ல நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த பெண்ணை.

அது மட்டுமல்ல கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் நாம் கேள்விப்பட்டோம், 34 வயது இளைஞர் ஒருவர் கணவனால் கைவிடப்பட்ட ஒரு குழந்தைக்கு தாயான 43 வயது பெண்ணை திருமணம் செய்து அந்தப் பெண்ணையும், அவள் குழந்தையையும் பொறுப்பேற்றுள்ளார்.

அதைப் போன்று 18 வயது இளம் யுவதி ஒருவர் 31 வயது வாலிபரை திருமணம் செய்துள்ளார். அந்த வாலிபரோ பணக்காரர் அல்ல, தொழில் இல்லாத ஒரு ஏழை. அவள் திருமணம் செய்தது வேறு எதற்கும் அல்ல அவர் ஒரு ஆஷிகே ரஸுல் என்ற ஒரே காரணத்திற்காக.

இதைப்போன்று சம்பவங்கள் ஏராளமாக இருக்கலாம். ஆனால் நாம் மேலே கூறியது எல்லாம் எமது கண்களால் பார்த்ததும், காதுகளால் கேட்டதும் மாத்திரமே. நாம் அறியாதது ஏராளமாக இருக்கலாம். இவர்கள் தான் உண்மையான முஃமின்கள், இவர்கள் தான் உண்மையான முறையில் ஸுன்னத்தை பின்பற்றுகிறார்கள்.

இன்று மக்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஸுன்னத் என்பது தாடி வைப்பதும், ஜிப்பா போடுவதும், தொப்பி அணிவதும், பர்தா அணிவது மாத்திரம் தான் என்று. இவைகள் மாத்திரம் தான் ஸுன்னத் என்றால் முனாபிக்கீன்கள் சிறந்த முஃமின்களாக இருந்திருப்பார்கள்,

தியாகம் எனும் பண்பு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பண்பு, ஸஹாபாக்களின் பண்பு, வலிமார்களின் பண்பு. தியாகத்தை கொண்டுதான் இஸ்லாமே பரவியது. இந்த தியாக உணர்வு, இந்த தியாக பண்பு முஃமின்களிடம் மாத்திரமே இருக்கும். இன்று ஏராளமான இளைஞர், யுவதிகள் மார்க்கத்தை படித்து தியாக சிந்தனையோடு, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சுன்னத்தை பின்பற்றி வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு (நிய்யத்தொடு) இருக்கிறார்கள். ஆனால் இன்று ஷைத்தான் பெற்றோர்கள் ரூபத்தில் வந்து இந்த இளைஞர், யுவதிகளின் நல்ல நிய்யத்தை அழித்து இல்லாமல் ஆக்குகின்றான்.

இன்று எத்தனையோ இளைஞர்கள் விதவைகளுக்கு வாழ்வு கொடுக்க முன் வருகிறார்கள் ஆனால் பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதை தடுக்கிறார்கள். அதைப்போன்று இன்று எத்தனையோ யுவதிகள் மார்க்கப்பற்றுள்ள, நற்குணமுள்ள ஏழை இளைஞர்களை திருமணம் செய்ய முன் வருகிறார்கள். ஆனால் பெற்றோர்கள் அதை தடுக்கிறார்கள். அதுமட்டுமல்ல எத்தனையோ இளைஞர், யுவதிகள் திருமணம் செய்தால் ஆஷிகே ரஸுல்களை தான் திருமணம் செய்ய வேண்டும், என்ற நல்ல நோக்கத்தில் இருக்கிறார்கள். ஆனால் பெற்றோர்களுக்கோ அதைப் பற்றி சிறிதும் அக்கறையோ, கவலையோ இல்லை. அந்த பிள்ளைகள் தங்களின் நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லியும் கூட அக்கறை அற்றவர்களாக பணத்திற்காக, சொந்த கடைக்காக வஹாபிகளை கூட திருமணம் செய்து வைக்க முன் வருகிறார்கள். இப்படிப்பட்ட பெற்றோர்களும் நம் சமுதாயத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இன்று இஸ்லாத்தில் ஏழைகள் அதிகரிப்பதற்கும், விதவைகள் அதிகரிப்பதற்கும் காரணம் என்னவென்று பார்த்தால் சமநிலை பேணப்படாதது தான். பணக்கார ஆண் ஏழை பெண்ணை திருமணம் செய்தால் இருவரும் பணக்காரர்களாக ஆகலாம் அதைப்போன்று, பணக்கார பெண் ஏழை ஆணை திருமணம் செய்தால் இருவரும் பணக்காரர் ஆகி சமநிலை பேணப்படும். ஆனால் இன்று பணக்காரன் பணக்காரனை தேடி போகிறான். பணம் பணத்துடன் செருக்கிறது. ஏழைகளிடம் போய் சமநிலை பேண வேண்டிய பணம் தேக்கமடைகிறது.

மூச்சுக்கு முன்னூறு தடவை முனாபிக் அல்லது வஹாபி என்று முஸ்லிம்களால் அழைக்கப்படுகின்ற கூட்டத்தினர்கள், திருமணம் என்ற இந்த விடயம் வந்தவுடன். தங்களின் கூட்டத்திற்கு மக்களை சேர்த்து கொள்வதற்காக வேண்டி, திருமணங்களை அழகான முறையில், ஸுன்னத்தான முறையில் செய்துகாட்டி எத்தனையோ முஸ்லிம்களை அவர்களின் கூட்டத்தில் சேர்த்துள்ளார்கள். இதற்கு யார் காரணம் என்று பார்த்தால் முஸ்லிம்கள் முஸ்லிமாக வாழாமல், ஸுன்னத்துக்களை புறக்கணித்து வாழ்வதினால் தான் இந்த நிலைமை. அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால் எமது முஸ்லிம்களின் பிழைகளை சுட்டிக்காட்ட போனால் புத்தகமே எழுதலாம். எமது நோக்கம் பிறரின் குறைகளை அலசி ஆராய்வதல்ல, பிறரின் குறைகளை தேடுவதல்ல மாறாக பிழைகளை சுட்டிக்காட்டி திருத்த வேண்டும், அவர்கள் திருந்த வேண்டும் என்பதுதான்.

முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் அவர்களில் சிலர் சிலருக்கு உதவியாளர்களாக இருக்கின்றனர். நன்மையை(ப் பிறருக்கு) அவர்கள் ஏவுகின்றனர். தீமையை விட்டும் (பிறரைத்) தடுக்கின்றனர். தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள், ஜகாத்தை கொடுத்து வருகிறார்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப்படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் அருள் புரிவான்  நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். அல் குர்ஆன் - ​ தவ்பா – 71

முஃமினான ஆண்களே! பெண்களே! முஸ்லிம் சகோதர, சகோதரிகளே! அல்லாஹ்வினதும், ரஸுலினதும் கட்டளைக்கு மாற்றம் செய்ய வேண்டாம். நாளை மறுமையில் தாய் பிள்ளைக்கு உதவி செய்ய மாட்டாள், பிள்ளை தாய்க்கு உதவி செய்ய மாட்டாள். கணவன் மனைவிக்கு உதவி செய்ய மாட்டான். மனைவி கணவனுக்கு உதவி செய்ய மாட்டாள். இப்படிப்பட்ட நிலையில் எமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களால் மாத்திரமே எமக்கு உதவி செய்ய முடியும் என்பதை மறந்து விட வேண்டாம். ஆதலால் உங்கள் வாழ்க்கையை அல்லாஹ், ரஸுலுக்காக என்ற நிலைக்கு மாற்றிக் கொள்ளுங்கள். மார்க்கத்துக்கு முரணான செயலை யார் செய்ய சொன்னாலும் செய்ய வேண்டாம். அல்லாஹ்வுக்கும், ரஸுலுக்கும் பயந்துக்கொள்ளுங்கள். பெற்றோர்கள் மார்க்கத்துக்கு முரணான செயலை செய்ய சொன்னால், அவர்களுக்கு நீங்கள் பணிவான முறையில் அமைதியான முறையில் மார்க்கத்தை விளங்கப்படுத்துங்கள். அல்லாஹ்விடம் அவர்களுக்காக துஆ செய்யுங்கள். அல்லாஹ் அவர்களுக்கும், எங்களுக்கும் ஆழமான அறிவையும், தெளிவான சிந்தனையையும் தருவானாக!

இது பெற்றோர்களின் அறிவீனமா?  அல்லது மறுமை நாளின் நெருக்கமா? 


நன்றி: www.மெயில்ஒ/ப்இஸ்லாம்.காம்




கண்மணி நாயகம் (ஸல்) அன்னவர்களின் மீது அன்பும், கண்ணியமும்


உண்மையில் முஸ்லிம்கள் என்றால் யார்? வெறுமனே வாயால் அல்லாஹ்வையும், அவனது ரஸுலையும் ஈமான் கொள்பவர்களா? நிச்சயமாக இல்லை, அல்லாஹ்வையும், அவனது ரஸுலையும் உண்மையாக உள்ளத்தால் ஈமான் கொண்டு, அவர்களது ஸிபத்துகளை அதாவது அவர்களுடைய பண்புகளை உள்ளதை உள்ளபடி உளப்பூர்வமாக ஏற்று ஈமான் கொண்டு, இன்னும் அல்லாஹ்வையும், அவனது ரஸுலையும் தனது உயிரைவிடவும் மேலாக நேசித்து, அவர்களுக்காக தன் உயிரையே தியாகம் செய்பவர்களே உண்மையான முஸ்லிம்களாவார்கள்.

சரி, நாங்கள் எவ்வாறு அல்லாஹ்வை ஈமான் கொள்ளவேண்டும்? அல்லாஹ்வை ஈமான் கொள்வது என்றால் “வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வை தவிர வேறு நாயன் யாரும் இல்லை என்று ஈமான் கொள்வதும் அவனுடைய ஸிபத்துகளை அதாவது அவனுடைய பண்புகளை வாஜிபான, முஸ்தஹீலான, ஜாயிஸான பண்புகளை உள்ளதை உள்ளபடி உளப்பூர்வமாக ஏற்றும் ஈமான் கொள்வதே அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்வதாகும்.

அதேபோல் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என்றும், அன்னவர்களுக்கு அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்டுள்ள ஸிபத்துகளையும் திருநாமங்களையும் உளப்பூர்வமாக ஏற்றும் ஈமான் கொள்வதே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது ஈமான் கொள்வதாகும். அதுமட்டுமின்றி அல்லாஹ்வை எந்தளவு நேசம் கொள்கின்றோமோ அதே அளவு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீதும் நேசம் கொண்டாலே ஈமான் நிறைவடையும், பரிபூரணமாகும். இதைத்தான் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: “யாருக்கு என் மீது முஹப்பத் இல்லையோ, அவருக்கு ஈமான் இல்லை.” என்பதாக.

மேலும் கூறினார்கள்:
“நான் ஒருவனுக்கு அவனுடைய பெற்றோர்கள், பிள்ளைகள் மற்றுமுள்ள மனிதர்கள் அனைவரையும் விட மிகப் பிரியமானவனாக ஆகின்ற வரை அவன் முஃமீனாக முடியாது.”
(நூல்; புகாரி 14,15, முஸ்லிம் 44–69,70, இப்னு மாஜா 67, நஸஈ 50–43, முஸ்னத் அஹ்மத் 3-288, மிஷ்காத் 7)

அல்லாஹ் அல்குர்ஆனில் கூறும் போது:
“இந்நபியாகிறவர் முஃமின்களுக்கு அவர்களின் உயிர்களை விட மேலானவராக இருக்கின்றார்கள்.” (சூரா 33:6)

அன்பியாக்களுக்கு அடுத்தபடியாக எல்லா உம்மத்துகளிலும் உயர்ந்த அந்தஸ்தையுடையவர்கள் ஸெய்யதுனா அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்தான். ஸுன்னத்துல் ஜமாஅத்தினரான எமது அகீதா இதுதான். இந்தளவு கௌரவத்தை, உயர்வை ஸெய்யதுனா அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எது பெற்றுக்கொடுத்ததென்றால் அது அவர்களின் பூரணமான ஈமானே காரணமாகும்.

உலமாக்கள் கூறுகிறார்கள்: ஸெய்யதுனா அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஈமான் எந்தளவு கனமானது என்றால் உலகிலே தோன்றிய, இனிமேல் தொன்றப்போகின்ற அனைத்து மனிதர்களுடைய ஈமானை ஒருதட்டிலும் ஸெய்யதுனா அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஈமானை இன்னுமொரு தட்டிலும் வைத்தால் ஸெய்யதுனா அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு ஏமாந்தான் கனமானதாக, பாரமாக இருக்கும் என்று உலமாக்கள் கூறுகிறார்கள். ஸெய்யதுனா அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எந்தளவு உயர்வான ஈமான் எவ்வாறு கிடைத்ததென்றால் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது அவர்கள் கொண்டிருந்த அளவுக்கடந்த நேசமும், அன்பும்தான் இந்த உயர்வான ஈமானை பெறுவதற்கு காரணமாக இருந்தது.

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: “அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு இந்த மேலான நிலையை அடைந்தது தமது உள்ளத்தில் ஒரு மேலான பொருளை கொண்டிருப்பதால் ஆகும்.” ஆம், அந்த மேலான பொருள்தான் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு கொண்டிருந்த அளவுக்கடந்த நேசமும், அன்பும் ஆகும்.

எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கொண்டிருந்த அன்பு இவ்வளவுதான் என்று அளவிடமுடியாது.

ஒரு முறை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தனது ஹபீபான ஸெய்யதுனா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒருநாள் இரவில் நாம் பிரயாணம் செய்யவேண்டி வரும். அப்போது நான் உங்களை இன்ஷா அல்லாஹ் அழைத்துப்போக வருகிறேன் என்று கூறிவைத்திருந்தார்கள். சில நாட்களுக்குப்பின் அல்லாஹ்விடமிருந்து ஹிஜ்ரத்தை மேற்கொள்ளும்படி கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டது.

ஒரு நடுநிசி வேளையிலே ஸெய்யதுனா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டுக்குச் சென்று கதவைதட்டுவதற்காக தனது முபாரக்கான கையை கதவின் மீது வைக்கும் முன்பே கதவு திறந்துக்கொண்டது. கூடவே ஸெய்யதுனா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிரயாணத்துக்கு தேவையான ஆயத்தங்களுடன் தயாராக வாசலிலே நின்றார்கள். இதனைக்கண்ணுற்ற கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஆச்சிரியப்பட்டு, “அபூபக்கரே, நான் இப்போது வருவது உங்களுக்கு எப்படி தெரியும்? வீட்டு வாசலிலே தயாராக காத்திருக்கிறீர்களே? என்று கேட்டபோது ஸெய்யதுனா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: “யா ரசூலுல்லாஹ் நீங்கள் எப்போது ஒரு இரவில் என்னை அழைத்துப் போக வருகிறேன் என்று கூறினீர்களோ அன்று முதல் இன்று வரை நான் இவ்விடத்தில் இவ்வாறுதான் காத்திருக்கிறேன்.

ஏன் என்றால் அல்லாஹ்வின் ஹபீபான தங்களின் வருகைக்காக நாங்கள் தான் காத்திருக்க வேண்டும். மாறாக அல்லாஹ்வின் ரஸுலே உங்களை எனது வீட்டு வாசலில் காத்திருக்க வைப்பதா? அந்த பெரிய குற்றத்துக்கு நான் ஆளாகாமல் இருக்கவே இவ்வாறு செய்தேன் என்றார்கள். இவ்வாறு அளவுக்கடந்த நேசத்தையும், கண்ணியத்தையும் இனிய மதீனத்து வேந்தர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது வைத்திருந்ததால் தான் ஈமானிலே உயர்ந்த அந்தஸ்தை பெற்றார்கள்.

இதேபோன்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களால், “எனக்கு பின்பு ஒரு நபி வருவதாக இருந்தால் அது ஸெய்யதுனா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களாக தான் இருப்பார்கள் என்று போற்றப்பட்ட ஸெய்யதுனா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஒரு முறை அவர்களின் மகனாரும், இமாம் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.

பேச்சினூடே ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பார்த்து உங்கள் தந்தை என் பாட்டனார் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அடிமைத்தானே என்று கூற இப்னு உமர் அவர்கள் வேதனையோடு தன் தந்தையிடம் இதை கூறிவிட்டார்கள். இதனைக்கேட்டதும் தன் மகனையும் இமாம் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் கையைப்பிடித்து கூட்டிக்கொண்டு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ரவ்லாவின் முன் நின்று யா ரஸுலல்லாஹ்! என்னை தங்களுடைய அடிமை என்று தங்களின் அருமை பேரர் கூறிவிட்டார்கள்.

இது அவரும் சாட்சியாக இங்கு இருக்கிறார். தாங்கள் அதை ஏற்றுக்கொள்ளுங்கள் யா ரஸுலல்லாஹ்! தாங்கள் என்னை அடிமையாக ஏற்றுக்கொண்டு விட்டால் நான் ஈருலகிலும் மேன்மை அடைந்து விடுவேனே யா ரஸுலல்லாஹ்! என்று கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்ட தேம்பித் தேம்பி அழுந்துக்கொண்டிருந்தார்கள்.

சுவர்க்கத்தைக்கொண்டு நன்மாராயம் பெற்ற இந்த அருமை ஸஹாபாவின் செய்கை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீதும் அவர்களின் சந்ததிகள் மீதும் காட்டப்படவேண்டிய அன்புக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இதேபோன்று ஸஹாபாக்கள் மட்டுமல்ல பின்னால் வந்த அனைத்து இஸ்லாமிய பெரியார்களும் வலிமார்களும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது அளவுகடந்த அன்பும், கண்ணியத்தையும் கொண்டிருந்தார்கள். அதனாலேயே அவர்களின் ஈமான் பரிபூரணமடைந்தது. அவர்களுக்கு உயர்ந்த அந்தஸ்தையும், பெற்றுக்கொண்டுத்தது.

இதையே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: “நீங்கள் யாரை முஹப்பத் வைக்கிறீர்களோ, அவர்களுடன் நாளை கியாமத்தில் இருப்பீர்கள்.” ஆகவே நாம் அல்லாஹ்வின் நேசத்தை திருப்தியை பெற்ற நல்லடியார்களாக வாழ்ந்திட வேண்டுமாயின் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை நமது உயிருக்கும் மேலாக நேசிக்க வேண்டும். அதிகம் அதிகம் ஸலவாத்தை ஓதி அன்னவர்களின் அன்பை பெற்றுக்கொள்ளவேண்டும். இதன் மூலம் நம் அனைவரையும் அல்லாஹ் பரிபூரணமடைந்த முஃமீன்களாக ஆக்கியருள்வானாக! ஆமீன்...


நன்றி: www.மெயில்ஒ/ப்இஸ்லாம்.காம்




புறம் பேசுவதன் விபரீதங்கள்!


 மனிதனுக்கு அல்லாஹ்வினால் ஏராளமான நிஃமத்துக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மனிதனின் உடலுறுப்புகள் அனைத்தையும் விட முதன்மையானது ஆகும். அதிலும் தான் கற்பனை செய்கின்ற விஷயங்களை, சிந்திக்கின்ற விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற மிக மிக முக்கிய உறுப்பாக மனிதனின் நாவு விளங்குகின்றது. இந்த நாவு, ஒரு மனிதன் உலகில் மக்களுக்கு மத்தியில் நல்லொழுக்கம் உள்ளவனாகவும், நல்லவனாகவும் தோன்றுவதற்கு காரணமாக அமைகின்றது. இதே போன்று ஒரு மனிதனை மிக மோசமானவனாகவும் ஒழுக்கம் கெட்டவனாகவும் மாற்றுவதற்கும் இந்த நாவு காரணமாக அமைகின்றது. நாவின் மூலம் செய்யக்கூடிய பாவங்கள் ஏராளமானவை. அவற்றில் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதென்பது சமூகத்திற்கு மத்தியில் முதன்மையாகவே விளங்குகின்றது.

புறம் என்றால் என்ன?

புறம் என்றால் என்ன என்பதற்கு சிறந்த ஒரு வரைவிளக்கனத்தை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

“புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, ‘அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்’ என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ ” என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்)” என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

புறம் பேசுவது பெரும்பாவமாகும்!

புறம் பேசுவது பெரும்பாவங்களில் ஒன்றாகும். தொழுகை, நோன்பு, ஜக்காத் இதர நல்லமல்கள் ஒன்றுமே இதற்கு ஈடாகாது! ஒரு மனிதன் வெறுக்கக்கூடிய எதனைப் பற்றிக் குறிப்பிட்டாலும் அது புறம்பேசுவதே ஆகும். உதாரணமாக, குள்ளன், நெட்டையன், குருடன், செவிடன் போன்ற உடல் சார்ந்த அனைத்துமே இதில் அடங்கும். ஒருவனைப் பற்றி அவன் அவ்விடத்தில் இல்லாமல் இருக்கும் போது, அவன் பித்அத்வாதி என்றோ அல்லது தொழாதவன் என்றோ குறிப்பிடுவதும் இதில் அடங்கும். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள், ‘நீ கூறுவது அவனில் இருந்தால் அது புறம் பேசுவதாகும்’ என்று கூறினார்கள். இவ்வாறு ஒருவரது குறையை மற்றவர்களிடத்தில் பேசுவது தான் புறம் பேசுதலாகும். அவ்வாறு பேசப்படுகின்ற குறைகள் குறிப்பிட்ட அந்த மனிதரிடம் இல்லையென்றால் அது அவனைப் பற்றிக் கூறிய அவதூறு / இட்டுக்கட்டாகும்.

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

புறம் பேசுவது சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து அல்லது பேசப்படுகின்ற நபரைப் பொறுத்து தாக்கங்கள் அதிகமாக இருக்கும். ஒருவன் கணவன் மனைவியர்களைப் பற்றி ஒவ்வொருவரிடமும் மாறி மாறி புறம் பேசுகின்ற போது அக்குடும்பத்திற்கு பிரச்சனைகளை அல்லது அக்குடும்பத்தைப் பிரித்து விடும் அளவிற்கு அவன் ஆளாகின்றான். இதனால் அந்த குடும்பமே குட்டிச்சுவராகும் அளவிற்கு சென்றுவிடும். இது ஒரு சாதாரண மனிதனைப் பற்றி புறம் பேசுவதைவிட ஆபத்தானதாகும்.

இதே போன்று ஒரு மார்க்க அறிஞரைப் பற்றி மக்களுக்கு மத்தியில் அவரது தனிப்பட்ட குறைகளைப் பற்றி புறம் பேசுகின்ற போது அவரது மற்ற சிறந்த கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள முன்வர மாட்டார்கள். இதன் மூலம் மக்களுக்கு அவ்வறிஞரின் நேரிய பல கருத்துக்கள் மக்களைச் சென்றடையாமல் அவர்கள் நேரான பாதையை விட்டும் வழிதவறிச் செல்வதற்கும் அவ்வாறு புறம் பேசியவன் காரணமாக அமைந்து விடுகின்றான். எனவே மற்றவர்களின் குறைகளை மக்களுக்கு மத்தியில் பரப்புவதை விட்டும் முற்றாக தவிர்ந்துக் கொள்ள வேண்டும். புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற இத்தகைய விபரீதங்களுக்குத் துணை போகின்றவர்களாக நாம் ஒருபோதும் ஆகிவிடக் கூடாது.

மறுமையில் மிகப்பெரும் நஷ்டவாளியாக நேரிடும்!

புறம் பேசுவது என்பது மேலே குறிப்பிட்டது போன்று இவ்வுலகில் தீய காரியங்களுக்கு எவ்வாறு காரணமாக அமைகின்றதோ அதே போன்று மறுமையில் நாம் நன்மைகள் பல செய்திருந்தாலும் ஒரு நன்மைக்கூட பயனளிக்காத நஷ்டவாளிகளாக்கிவிடக்கூடிய அளவிற்கு தீமை நிறைந்ததாக இருக்கின்றது. மறுமையில் நஷ்டவாளிகள் யார் என்பதை நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடத்தில், ‘உங்களில் நஷ்டவாளி யார் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். (அதற்கு அவர்கள்) ‘எங்களில் (எவர்களிடத்தில்) தீனாரும் உலகத்தில் வாழ்வதற்கு வசதி வாய்ப்பும் இல்லையோ அவர்களே நஷ்டவாளி என்று குறிப்பிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மறுமை நாளில் ஒரு மனிதன் தொழுகை, நோன்பு, ஜக்காத் போன்ற நல்லறங்களுடன் வருவான். ஆனால் பலர் வந்து, ‘இவன் என்னை ஏசியவன், நான் செய்யாத விஷயத்தை என் மீது சுமத்தியவன், எனது செல்வத்தை சாப்பிட்டவன், இரத்தங்கள் ஓட்டியவன், அடித்தவன் என்றெல்லாம் அவனுக்கு எதிராக மனிதர்கள் முறையீடு செய்வார்கள். அப்போது அவன் இவ்வுலகில் செய்த நல்லமல்களை எடுத்து அவர்களுக்கு கொடுக்கப்படும். நல்லமல்கள் முடிந்த பிறகு அவர்களின் தீமைகளிலிருந்து எடுக்கப்பட்டு இம்மனிதனுக்கு கொடுக்கப்படும். இவ்வாறு அவன் நரகத்திற்கு நுழைவிக்கப்படுவான். (ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)

இந்த நபிமொழி மறுமையில் புறம் பேசியவனுக்கு கொடுக்கப்படும் கூலியை தெளிவாகவே கூறுகின்றது. ஒருவன் இவ்வுலகில் எவ்வளவு தான் நற்காரியங்கள் செய்தாலும் அவனது புறம் பேசுதலுக்கு மறுமையில் ஒன்றுமே ஈடாகாது என்பதனையும் நாம் மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும். ஆகையால், முதல் காரியமாக நாம் மற்றவர்களின் குறைகளைப் பற்றி அலசி ஆராய்ந்து பிறரிடம் கூறி புறம் பேசிய பாவத்திற்கு ஆளாவதை விட்டுவிட்டு நமது குறைகளை அலசி ஆராய்ந்து அவற்றைக் களைவதற்கு முயற்சிக்க வேண்டும். நம்மை நரக வேதனையில் இருந்து காப்பாற்றிக்கொள்ள பெருமுயற்சி எடுக்க வேண்டும்.

மேலும் புறத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது,

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)

நாவைக் கட்டுப்படுத்துவோம்! நாசத்தைத் தவிர்ப்போம்!

நமக்குத் தெரியாத விஷயங்களை விட்டும், அத்தகைய செய்திகளை வதந்திகளாகப் பரப்புவதை விட்டும் நாம் முற்றாக தவிர்ந்துக் கொள்ளவேண்டும். இவர் சொன்னார், அவர் சொன்னார் என்ற வார்த்தைகளை முற்றாகவே தவிர்க்க வேண்டும். சில வேளைகளில் இவ்வாரான வார்த்தைகள் அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் பொய் உரைப்பதற்குக் கூட இட்டுச் செல்லும். இதனால் எவ்வித ஆதாரமும் இல்லாத விஷயத்தைக்கூட துளியும் அல்லாஹ்வின் மீது அச்சமில்லாமல் முன்வைக்கக் கூடிய அளவிற்கு ஆளாக நேரிடும். நாம் பேசும் போது அளந்து பேச வேண்டும். நாம் பேசுகின்ற ஒவ்வொரு விஷயத்திலும் ஏதாவது தவறு இருக்கின்றதா? அல்லது பிறரை துன்புறுத்தும் வகையில் நமது பேச்சுக்கள் அமைந்திருக்கின்றதா? என்று கவனமுடன் பார்க்க வேண்டும்.

நாம் பேசக் கூடிய அனைத்து விஷயங்களுமே பதிவு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன (அல்-குர்ஆன் 50:18) என்பதை நாம் ஒரு கணமும் மறந்துவிடக்கூடாது.

நாம் பேசுகின்ற விஷயம் நல்லதாக இருந்தாலும் தீயதாக இருந்தாலும் பதியப்படுகின்றது என்பதை இவ்வசனம் நமக்குத் தெளிவு படுத்துகின்றது. இதனால் நியாயத் தீர்ப்பு நாளில் இவைகள் பரிசீலிக்கப்பட்டு அதற்குத் தக்கவாறு தகுந்த கூலி கொடுக்கப்படும். இதனால் நாம் மிகுந்த கவனமுடன் நடந்துக்கொண்டு நமது நாவைக் கட்டுப்படுத்தி மறுமையில் நஷ்டவாளியாவதை விட்டும் தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.

நாம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் பிரயோசனமுள்ளதாகவே இருக்க வேண்டும். பிறரை புறம் பேசும் வார்த்தையாக இல்லாமல் இருக்கவேண்டும். முடிந்தவரைக்கும் நல்லவைகளையே பேசவேண்டும். முடியாவிட்டால் மௌனமாக இருக்க முயலவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்’ (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)

மனிதனுக்கு அல்லாஹ்வினால் ஏராளமான நிஃமத்துக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மனிதனின் உடலுறுப்புகள் அனைத்தையும் விட முதன்மையானது ஆகும். அதிலும் தான் கற்பனை செய்கின்ற விஷயங்களை, சிந்திக்கின்ற விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற மிக மிக முக்கிய உறுப்பாக மனிதனின் நாவு விளங்குகின்றது. இந்த நாவு, ஒரு மனிதன் உலகில் மக்களுக்கு மத்தியில் நல்லொழுக்கம் உள்ளவனாகவும், நல்லவனாகவும் தோன்றுவதற்கு காரணமாக அமைகின்றது. இதே போன்று ஒரு மனிதனை மிக மோசமானவனாகவும் ஒழுக்கம் கெட்டவனாகவும் மாற்றுவதற்கும் இந்த நாவு காரணமாக அமைகின்றது. நாவின் மூலம் செய்யக்கூடிய பாவங்கள் ஏராளமானவை. அவற்றில் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதென்பது சமூகத்திற்கு மத்தியில் முதன்மையாகவே விளங்குகின்றது.

தொகுப்பு: கடலூர் முஸ்லிம் நண்பர்கள்




தர்மம்


உங்களில் ஒருவர் பேரிச்சம்     பழத்தின் ஒரு துண்டையாவது (தர்மம்) செய்து நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து     கொள்ள முடியுமாயின் அதை அவர் செய்து கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அதியீஇப்னு ஹாதம்(ரலி)நூல்கள்: புகாரி,   முஸ்லிம்


    <<<<<<<< OOOOOOO>>>>>>>>

   
ஒவ்வொரு முஸ்லிம் மீதும்     தர்மம் செய்வது அவசியமாகிறது என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒருவர் (தர்மம் செய்ய எப்பொருளையும்) காணவில்லையாயின் என்று வினவ அவர் தன் கரங்களால் உழைத்து அதில் தானும் பலன் அடைந்து மேலும் தர்மம் செய்யட்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்)த்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒருவர் (தர்மம் செய்ய எப்பொருளையும்) காணவில்லையாயின் என்று வினவ ”அவர் தன் கரங்களால் உழைத்து அதில் தானும் பலன் அடைந்து மேலும் தர்மம் செய்யட்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபித்தோழாகள் ‘அவர் அதற்கும் இயலாவிடின் என்று வினவ அவர்     நன்மையை (பிறருக்கு) ஏவட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபித்தோழர்கள் அம்மனிதர் அதற்கும் இயலாவிடின் என்று வினவ ”அவர் (பிறருக்கு) தீமை செய்வதை விட்டு தவிர்த்து கொள்ளட்டும். அதுவே     தர்மமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள். அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரி(ரலி)நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ


<<<<<<<< OOOOOOO>>>>>>>>

 
 நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். ”நான் உமக்கு நன்மையானவற்றின் வாயில்களை அறிவிக்கட்டுமா? நோன்பு கேடயமாகும் மேலும் தண்ணீர் நெருப்பை அணைப்பது போல தான தர்மம் பாவத்தை அழித்துவிடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஅத் இப்னு ஜபல்(ரலி)நூல்கள்: திர்மிதி,     நஸயீ, அஹ்மத்


<<<<<<<< OOOOOOO>>>>>>>>

   
உங்களில் யார் இன்று நோன்பு நோற்றிருக்கிறார் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர்(ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள். உங்களில் யார் இன்று ஜனாஸாவைப் பின் தொடர்ந்திருக்கிறார் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள். உங்களில் யார் இன்று மிஸ்கீனுக்கு உணவு அளித்திருக்கின்றார் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள்     உங்களில் யார் இன்று நோயாளியை சந்தித்தார் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள் இவையனைத்தும் ஒரு மனிதர் விஷயத்தில் ஒன்றுபட்டிருக்குமானால் அவர் சொர்க்கத்தில் புகுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், நஸயி


<<<<<<<< OOOOOOO>>>>>>>>

   
தர்மம் செல்வத்தைக் குறைத்து விடுவதில்லை மன்னிப்பதன் மூலம் அல்லாஹ் மதிப்பை உயர்த்தாமாலிருப்பதில்லை. அல்லாஹ்வுக்காக யாரேனும் பணிவுடன் நடந்தால் அவரை அல்லாஹ் உயர்த்தாமலிருப்பதில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம்,     திர்மிதி


<<<<<<<< OOOOOOO>>>>>>>>
   

ஒரு மனிதன் இறந்துவிட்டால் மூன்று செயல்களைத்தவிர மற்றவை அவனை விட்டு அறுந்துவிடுகின்றன. நிலையான தர்மம், பிறருக்கு பயன்தரக்கூடிய கல்வி, தன் தந்தைக்காக பிரார்த்திக்கும் நற்பிள்ளை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, திர்மிதி


<<<<<<<< OOOOOOO>>>>>>>>

   
விபசாரியான ஒரு பெண் ஒரு கிணற்றின் விளிம்பில் தன் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள் அந்த நாயை தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக்கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி கிணற்று நீரை இறைத்து அதற்கு கொடுத்தாள் ஆகவே அது பிழைத்து கொண்டது. அவள் ஒர் உயிருக்குக் காட்டிய இந்த கருணையின் காரணத்தினால் அவளுக்கு பாவமன்னிப்பு வழங்கப்பட்டது.     அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்


<<<<<<<< OOOOOOO>>>>>>>>

 
 ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து; அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?   எனக்கேட்டார் ”நீர் ஆரோக்கிய முள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும் வருமையைப் பயப்படுபவராகவும், செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக்குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு ‘இன்னாருக்கு இவ்வளவு’ என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது  பொருட்களை மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே! என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்


<<<<<<<< OOOOOOO>>>>>>>>

   
தர்மத்தில் சிறந்தது எது?    என்று மக்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு குறைந்த செல்வமே உள்ளவர் அதிலிருந்து தர்மம் செய்வது நீங்கள் உங்கள் தர்மத்தை உங்கள் வீட்டாரிலிருந்து தொடங்குங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: அபூதாவூத், அஹ்மத்


<<<<<<<< OOOOOOO>>>>>>>>

   
உபரியான தான தர்மங்களை அது செல்வமாகவோ அல்லது தானிய வர்க்கமாகவோ அல்லது அசைவற்ற பொருளாகவோ இருந்தால் முதலில் மனைவி, மக்கள் உறவினர், அண்டைவீட்டார் என ஆரம்பித்து தான தர்மம் செய்ய     ஆரம்பிப்பீராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்


<<<<<<<< OOOOOOO>>>>>>>>

   
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் ”என் தாயார் திடீரென இறந்துவிட்டார். அவர் (மரணமடையும் முன்புபே) முடிந்திருந்தால் தர்மம் செய்யச் சொல்லியிருந்திருப்பார் என்று நான் கருதுகிறேன். அவர் சார்பாக நான் தர்மம் செய்யலாமா? என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ”ஆம்” சார்பாக தர்மம் செய்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், முஅத்தா

நன்றி: www.ரீட்இஸ்லாம்.நெட்

ஞாயிறு, 25 நவம்பர், 2012



இஸ்லாம் ஓர் கண்ணோட்டம்

,f;fl;Liu rpWth; rpWkpah; kw;Wk; K];ypkhf gpwe;Jk; ,];yhj;ijg; gw;wpa tpopg;Gzh;T ,y;yhjth;f;F

,k;khngUk; gpugQ;rj;jpd; jd;ik> mjd; ,ay;G vd;d vdgij vk;khy; mwpa KbAkh?  mJ epiy ngw;wpUg;gjw;Fwpa ,ufrpak;.vd;dntd;gjw;Fj; jpUg;jpfukhd tpsf;fq;fs; VJk; ,Uf;fpd;wdth? xU rhjhuz FLk;gj;ij top elj;Jtjw;F nghWg;Gs;s xUtu; Njit vd;gij ehk; mwpNthk;. xU efuhl;rpia rpwe;j epu;thf Kiw ,y;yhky; elj;j KbahJ. xU jiytd; ,y;yhky; xU ehl;il Ml;rp nra;a KbahJ. mNj Nghy; cUthf;FNthd; ahUkpd;wp xd;W jhdhf cUthfTk; KbahJ.vd;gij ehk; mwpfpNwhk;.  ,t;Tyfk; xOq;fhd rPuikg;gpy; vt;tpj gpur;idAkpy;yhky; ,aq;fp tUtij ehk; fhz;fpd;Nwhk; ,t;tpaf;fk; ,t;thW gy;yhapuk; tUlq;fshf eilngw;W tUfpd;wJ. mg;gbahdhy; ,t;Tyfk; mjpYs;s gilg;gpdq;fSk; kdpju;fs; cl;gl jhdhf jw;nrayhfj; Njhd;wpaJ vd;W $w KbAkh?

,t;Tyfpy; kdpjd; kpfr;rpwa ,lj;ijNa trpf;fpd;whd;.  mtdhy; ahtUk; tpUk;gf;$ba jpl;lq;fisAk;>  mikg;Gf;fisAk; cUthf;fyhk; mt;thwhapd; mtDk; ,t;TyfKk; epr;rakhf xU rPupa xOq;fikg;gpd; fPo; mikag;ngw;wpUf;f Ntz;Lk;. vkJ ngsjPf tho;f;ifapd; gpd;ddpapy;  xU rPuhd xOq;fikg;G ,Ug;gJ Gydhfpd;wJ. me;j mikg;ig rPuhd Kiwapy; ,af;Ftjw;F gpuj;jpNafkhd xU rf;jp ,Ue;J tUtij ehk; fhzyhk; vdNt ,t;tofpa cyifAk; ,jpy; cs;sitfisAk; rPuhfg; gilj;j gilg;ghsd; xUtd; ,Uf;fj;jhd; Ntz;Lk;. mtNd cyfpy; vy;yh gilg;GfisAk; VNjh xU tpNrl Nehf;fj;jpw;fhf gilj;jpUf;fTk; Ntz;Lk;.  

Mo;e;J rpe;jpf;Fk; kdpjd; vtDk; ,tw;iwnay;yhk; gilj;j flTs; xUtd;  ,Uf;fpwhd; vd;gij ,yFtpy; mwpe;J nfhs;thd;. NkYk; mtd; xU rhjhuz kdpjdy;yd;.  Vnddpy; xU kdpjdhy; ,d;ndhU kdpjid gilf;f KbahJ. ,iwtd; xU jhtuNkh my;yJ xU gpuhzpNah my;yd; rpiyNah> tpf;fpufNkh my;yd;  Vnddpy; ,itfspdhy; xd;iw gilf;fNth jhkhf ,aq;fNth KbahJ. vdNt ,it midj;ijAk; gilj;J gupghypg;gtd; xUtd; ,Uf;fNt Ntz;Lk; vd;gJ cWjpahfpd;wJ. NkYk; gilg;ghsd; gilg;Gf;fs; vy;yhtw;iwAk; tpl Kw;wpYk; NtWgl;ltdhfTk; mtw;iw tpl cau;e;jtdhfTk;> J}a;ikahd tdhfTk; ,Uf;f Ntz;Lk;.

xNu ,iwtdhd my;yh`;itg;gw;wpj; njupe;J nfhs;s gy topfSz;L.  cyfpYs;s Mr;rHakhdJk;> El;gkhdJk;> ftu;r;rp kpf;fJkhd nghUl;fis cw;W Nehf;fpdhy; mjd; gpd;dzpapy; my;yh`;tpd; jj;Jtq;fs; kiwe;jpUg;gij czuyhk;. my;yh`; gilj;j gilg;gpdq;fSs; kdpj tu;f;fKk; xd;whFk;. mtd; kdpju;fis  gilj;jJ Kjy; mtu;fSf;F ey;top fhl;Ltjw;fhf mtu;fs; tho;e;j fhyq;fspy; mtu;fspypUe;Nj rpwe;j mwpthw;wy; kpf;f ,iwj; J}ju;fis mDg;gp itj;jhd; mj;J}ju;fspy; rpyUf;F Ntjf;fl;lisfis mUspdhd;. 

mtu;fSf;F mUsg;gl;l Ntjq;fspd; Kyk; my;yh`;itg;gw;wpAk; mtDila gz;Gfisg; gw;wpAk; ed;F mwpe;Jf;nfhs;s KbAk;mtdJ J}ju;fspy; ,Wjpahf mDg;gg;gl;ltNu Kfk;kj; egp (]y;) Mthu;fs;. ,iw Ntjk; mUsg;gl;l J}ju;fSs; ,tu;fSk; xUtuhthu;. ,tu;fSf;F my;yh`; ,Wjpahd> G+uzj;Jtk; tha;e;j mw;Gjkhd my;-Fu;Mid mUspdhd;. mt;Ntjj;ijAk; mjpYs;stw;iwAk; mijf; nfhz;L te;j ,Wjpj;J}ju; Kfk;kj;(]y;) mtu;fisAk; KOikahf ek;GtNj ,];yhkhFk;. 

,e;j ,];yhk; my;yh`;tpd; jdpj;Jtk;> ,iwik Mfpatw;iw  tpRthrpf;Fk;gb typAWj;JtNjhL> ,t;Tyfpd; cz;ik jd;ikiaAk; mjpy; kdpjdpd; epiyg;ghL vd;d? vd;gijAk; vLj;Jf;fhl;LfpwJ. ,e;j ek;gpf;if kdpjdplk; kd mikjpia Vw;gLj;Jk; mNj Ntisapy; jtwhd ,iw ek;gpf;ifapypUe;J mtid tpopg;Gwr;nra;J mtd; my;yh`;Tf;F Mw;w Ntz;baew;nray;fs; ahit? vd;gijAk; vLj;Jf;fhl;LfpwJ. ek;gpf;if vd;gJ ehtpdhy; nkhoptNjhLkl;Lk; epd;W tplhJ nraypYk; fhl;lg;gl Ntz;Lk;. Viddpy; ntWk; ek;gpf;if kl;Lk; vt;tpjg;gaidAk; juhJ.

my;yh`;tpd; xUikg;ghl;by; ek;gpf;iff;nfhz;Ls;s xt;nthUtUk; ,t;Tyfpy; thOk; kdpju;fs; midtiuAk; ve;j tpj Vw;wj;jho;Tkpd;wp xNu FLk;gj;jpduhf Vw;W elf;f Ntz;Lk;. Vnddpy;mtu;fs; midtiuAk; ru;t ty;yik nfhz;ltdhd my;yh`; xUtNd gilj;jhd;. mtNdmidtiuAk; gupghypj;J Ngh\pf;fpwhd;. kdpju;fs; midtUk; mtdpd; mbik Mthu;fs;. mtu;fs;jkJ nrhe;j tpUg;gg;gb nraw;gLtij mtd; tpUk;GtJkpy;iy. my;yh`;tpd; kPJ ek;gpf;iff;nfhz;L mtdJ J}ju;fs; fhl;ba topKiwfis Vw;W ele;jtu;fSf;F kl;LNk kWikapy; ew;gad; fpilf;Fk;. Mdhy; my;yh`;Tf;F topgLk; tp\aj;jpy; mtu;fs; mtDf;Fk; jkf;Fkpilapy; vtiuAk;eLtu;fshf Mf;fhky; NeubahfNt jkJ njhlu;Gfis mtDld; itj;Jf;nfhs;s Ntz;Lk;.

,];yhk; xU Gjpa khu;f;fky;y vdpDk; mJ cyfpw;F Kjy; kdpjuhd Mjk; (miy) Kjy; kw;Wk;E}`;> ,g;whfPk;> ,];khaPy;> ,];`hf;> jhT+j;> %]h> <]h (miy) MfpNahUf;Fk;> Vida vy;yh,iwj;J}jh;fSf;Fk; my;yh`;thy; mUsg;gl;l topfhl;Ljypd; njhluhFk;. Mdhy;> Kfk;kj; egp (]y;) mtu;fSf;F mUsg;gl;l ,];yhk; gupG+uzkhdJk;> ,WjpahdJk;> kdpj rKjhaj;jpw;F Njitahd rfy mk;rq;fisAk; cs;slf;fpaJkhFk;.

my;yh`; ,Wjpahf ,wf;fpaUspa Gdpj Ntjkhd my; Fu;Md; ,];yhkpa mbg;gil Nfhl;ghLfisAk;rl;lq;fisAk; mjpfkjpfkhf vLj;Jf;$WfpwJ. NkYk; my; Fu;Md; ,];yhj;jpd; Muk;g rka Nfhl;ghLfs;> xOf;f eil Kiwfs;> kdpjdpd; tuyhW> tzf;f Kiwfs;> mwpT> Qhdk;> kdpj-,iwj;njhlu;Gfs;> kdpjdJ Vida njhlu;Gfs;. kdpj rKjha mwpTg;G+u;tkhd xOf;f eil Kiwfs;> nghUshjhuk;> murpay;> ePjpj;Jiw> rl;lk;> ru;tNjr njhlu;Gfs;> Nghd;w Kf;fpa tplaq;fisAk; mJ cs;slf;fpAs;sJ.

,jw;F mLj;jjhf Kfk;kj; (]y;) mtu;fspd; nrhy;> nray;> mq;fPfhuk; midj;Jk; `jP]; vdg;gLk;. ,e;j `jP];fs; egp (]y;) mtu;fspd; Njhou;fshy; kpf ftdkhfTk;> kpfj; njspthfTk;jdpahfj; njhFf;fg;gl;Ls;sd. NkYk; ,it my; Fu;Mdpd; trdq;fis tpsf;FtjhfTk;> njspthf;FtjhfTk; mike;Js;sd.

,];yhj;jpy; tpRthrk; nfhs;s Ntz;ba mbg;gilf; fhupaq;fs;

Xu; cz;ik K];ypk; gpd; tUk; mbg;;gil mk;rq;fspy; ek;gpf;iff;nfhz;ltdhf ,Uf;f Ntz;Lk;.

1. tzf;fj;jpw;Fwpatd; my;yh`; xUtd; kl;LNk vd tpRthrk; nfhs;s Ntz;Lk;.
mtd; epiyahdtd;> xg;Gtikaw;wtd;> ty;yik kpf;ftd;> Kbtw;w nka;g;nghUs;. md;G epiwe;jtd;mUspuf;fKilatd;> midj;ijAk; gilj;J gupghypj;J Ngh\pg;gtd;.

2. my;yh`;tpd; mkuh;fs; (kyf;Ffs;) kPJ tpRthrk; nfhs;s Ntz;Lk;. mtu;fs; xspapdhy; gilf;fg;gl;l J}a;ikahd> caue;j gz;Gfis cila my;yh`;tpd; mbikfs;. ,aw;ifahf mtu;fs; czT> cwf;fk; Nghd;w ve;j NjitfSk; ,y;yhjtu;fs;. mtu;fs; ,uT gfyhf ,iwtid tzq;fpf;nfhz;bUg;gtu;fs;. mtu;fs; Fwpg;gpl;l rpy nray;fspy; mku;j;jg;gl;Ls;s ,iw gzpahsu;fs;. mtu;fs; my;yh`;tpd; fl;lisg;gb kl;LNk nray;gLthu;fs;. mtDf;F xU NghJk; khW nra;a khl;lhu;fs;. ,tu;fspy; mjpf rf;jp kpf;ftuhd [pg;uPy; (miy) %yNk my;yh`; jdJ J}ju;fSf;F ,iw thf;fpaq;fis mUspdhd;.

3. my;yh`;tpdhy; ,wf;fpaUsg;gl;l Ntj E}y;fisAk;> fl;lisfisAk; tpRthrk; nfhs;s Ntz;Lk;. mtDila J}ju;fs; jhDk; Neh;top ele;J my;yh`;tpd; nghUj;jj;ijg; ngwty;y  Neupag;ghijia mtu;fsJ rKjhaj;jpdUf;F vLj;Jf;fhl;bdhu;fs;. ,tu;fspy; egp ,g;whfPk; > %]h>jhT+j;> <]h (miy) Mfpatu;fSf;F my;yh`; Ntj thf;fpaq;fis mUspdhd;. ,tu;fSf;Fg;gpd;du; gy Mz;Lfs; fopj;J > Kfk;kj; egp (]y;) mtu;fSf;F jpUf;Fu;Md; mUsg;gl;lJ.Kd;Ds;s Ntj thf;fpaq;fspy; nghjpe;Js;s midj;J eyd;fisAk; xd;W Nru;j;J ,WjpahfmUsg;gl;l ,iw NtjNk my;Fu;Md;. my; Fu;Md; my;yhj Vida Ntj E}y;fs; jw;NghJ tof;fope;Jk;> khw;wkile;JNkjhd; fhzg;gLfpd;wd. Mdhy; my; Fu;Md; khj;jpuNk vt;tpj khw;wq;fSkpd;wp G+uzj;Jtk; tha;e;jjhfTk;> ek;gj;jFe;jjhfTk; >capNuhl;lk; cs;sjhfTk; fhzg;gLfpd;wJ.

4. mtDila J}ju;fis> mtu;fSf;fpilapy; vt;tpj Vw;wj;jho;Tkpd;wp tpRthrk; nfhs;s Ntz;Lk;. my;yh`; kdpju;fspd; Njitf;Fj; jf;fthW gy; NtW ehl;ltUf;Fk; gy; NtW r%fj;jpdUf;Fk;ey; top fhl;lTk;> jPik nra;Nthiu vr;rupf;if nra;aTk; J}ju;fis mDg;gp itj;jhd;. mtu;fs;kdpj rKjhaj;ij vt;thW Neu;topg;gLj;j Ntz;Lk;> mtu;fs; jkJ ,ul;rfid vt;thW tzq;fptopgl Ntz;Lk;  vd;gjidf; fw;Wf; nfhLg;gjw;fhf Ntj thf;fpaq;fisAk; ,wf;fp mUspdhd;. ,Wjp Ntjkhd my; Fu;Mdpy; ,tu;fspy; 25 J}ju;fSila ngau;fs; Fwpg;gplg;gl;Ls;sJ. Kfk;kj; egp(]y;) mtufs; ,j;J}ju;fspy; ,WjpahdtUk; rpwg;G kpf;ftUkhthu;.

5. ,Wjpj;jPu;g;G ehspd; kPJ tpRthrk; nfhs;s Ntz;Lk;. vd;Nwh xUehs; ,t;TyfKk; mjpYs;sitfs; midj;Jk; mopf;fg;gLk;. gpd;du; mitfs; ahTk; kPz;Lk; tprhuizf;fhf my;yh`;tpd; Kd;dpiyapy; vOg;gg;gLk;. xt;nthU Mj;khTk;,t;Tyfpy; jhk; nra;j nray;fSf;Nfw;g gpujpgyidg; ngw;Wf; nfhs;Sk;. my;yh`;Tf;FnghUj;jkhfTk; ePjpahfTk;> Neu;ikahfTk; ele;jtu;fs; ,d;gq;fs; epiwe;Js;s Rtu;f;fj;ij milthu;fs;. mq;NfNa mtu;fs; Kbtw;w fhyk; tiu epue;jukhf jq;fpapUg;ghu;fs;.my;yh`;Tf;F khw;wkhf ele;jtu;fs; gaq;fukhd neUg;Gk;> nfhba NtjidfSk; epiwe;j eufj;ij milthu;fs; mjpNyNa mtu;fs; Kbtw;w fhyk; epue;jukhf jq;fpapUg;ghu;fs;.

6. ,t;Tyfpy; eilngWk; ed;ik> jPik midj;Jk; my;yh`;tpd; Vw;ghl;bd; gbNa    eilngWfpd;wJ vd;W xt;nthU K];yPKk; ek;gpf;iff; nfhs;s Ntz;Lk;. cyfpd; vy;yh gilg;gpdq;fSk; mtdJ Mizg;gbAk; tpUg;gj;jpd; gbANk nray;gLfpd;wd . mtdJ fw;gidf;Fk; jpl;lq;fSf;Fk; khw;wkhf vJTk; eil ngw khl;lhJ. vy;yhg; nghUl;fs; kPJk; mtdJ mwpTk;> rf;jpAk; R+o;e;jpUf;fpwJ. QhdKk; mUSk; cilatdhd mtdJ fhupaq;fs;midj;Jk; xU Nehf;fKk; fUj;JKilajhFk;.  ,tw;iw Mokhf rpe;jpf;Fk;NghJ vkJ mwpTk; kd mikjpAk; $bf;nfhz;Nl NghfpwJ. mtdJ nray;fs; jPikahdjhfNth> vk;khy; tpsq;fpf;nfhs;s KbahjjhfNth ,Uf;fyhk;. Mdhy; mr;nray;fs; ahTk; kdpjdpd; gbg;gpidf;fhf my;yJ Nrhjizf;fhfNt Vw;gLfpwJ vd ek;g Ntz;Lk;.

xt;nthU K];ypKk; filg;gpbf;f Ntz;ba ,];yhj;jpd; Kf;fpaf; flikfs;.

,];yhj;ijg; nghWj;jtiu Nkw;nrhd;d tp\aq;fis ntWkNd ek;GtJ kl;Lk; NghjhJ. Vnddpy; nrayw;w ek;gpf;if gydw;w xd;whFk;. nrayw;w ek;gpf;if vspjpy; khWglf;$baJ ,e;ek;gpf;if nraw;ghl;by; my;yJ ghtidapy; ,y;yhjNghJ capNuhl;lkw;wjhfTk;> nray;jpwd; mw;wjhfTk; MfptpLfpwJ.

,];yhj;jpd; Ie;J flikfs;

1. rhl;rp $wy;. (\`hjijd;)
cz;ikapy; tzq;Ftjw;F jFjp thae;jtd; my;yh`; xUtidj;jtpu NtW ahUkpy;iy vd;Wk; Kfk;kj; egp (]y;) mtu;fs; ,Wjp ehs; tiu kdpj rKjhak; midj;jpw;Fk; my;yh`;tpdhy; mDg;gg;gl;l mtDila ,Wjpj;J}jUk;> mbikAkhthu;fs; vd rhl;rp $wy;. ,jd; %yk; K];ypk;fs; midtUk; my;yh`;tpd; fl;lisfisAk;> Kfk;kj; egp (]y;) mtu;fs; fhl;br;nrd;w top KiwfisAk; jkJ tho;f;if Kiwahf vLj;J elf;ff; flikg;gl;Ls;sdu;.

2. njhOif (m];]yh`;)
xU ehisf;F INtis Fwpj;j Neuj;jpy; my;yh`;Tf;fhf njho Ntz;Lk;. njhOif my;yh`;tpd; kPJs;s ek;gpf;ifia cWjpg;gLj;JtNjhL> cau;e;j xOf;f tho;Tf;F topfhl;LfpwJ. ,J cs;sj;ij J}a;ikg; gLj;JtNjhL khdf;Nflhd fhupaq;fspypUe;Jk;> jPikfspyUe;Jk; kdpjid ghJfhf;fpwJ.
INtisj; njhOiffshtd.

1. /g[;u; njhOif (mjpfhiy)
2. Sfu; njhOif (gfy; Neuk;)
3. m]u; njhOif (khiy Neuk;)
4. kf;upg; njhOif (R+upa kiwtpd; gpd;)
5. ,\h njhOif (,uT Neuk;)

3. ju;kk; (m];]f;fhj;)
]fhj; vd;gJ nghUshjhuk; rk;ge;jg;gl;l xU tzf;fkhFk;. mjd; nghUs; J}a;ikg; gLj;Jjy; vd;gjhFk;. ]fhj; vd;gJ xt;nthUtUk; jhk; rk;ghjpj;j gzj;jpNyh> nghUspNyh Fwpf;fg;gl;l njhifia tpl Nkyjpfkhf ,Uf;Fk; NghJ mtw;wpypUe;J Fwpg;gpl;l xU njhifia my;yJ msit ju;kkhf Fwpg;gpl;ltu;fSf;F toq;FtjhFk;. ,];yhkpa mbg;gilapy; ]fhj; Mo;e;j jj;Jtq;fisAk; kdpjhgpkhd rpwg;gpay;GfisAk; rKjha> murpay;> nghUshjhu Nkk;ghLfSf;F rpwe;j jpl;lkhf tpsq;FfpwJ.

4. Nehd;G (m];]t;k;)
ukohd; khjk; KOtJk; njhluhf Nehd;G itf;f Ntz;Lk;. mjpfhiyapypUe;J R+upa m];j;jkdk; tiu cz;zhkYk;> gUfhkYk; fytpay; njhlu;Gfis jtpu;j;Jk; ,Uj;jy; Ntz;Lk;. Kf;fpakhf ukohd; khjj;jpy; jPa vz;zq;fspyUe;Jk;> jPa nray;fspy; ,Ue;Jk; jd;idg; ghJfhj;Jf; nfhs;tNjhL> nghJthf KO tUlj;jpYk; ,e;j ey;y eil Kiwfisg; gpd; gw;w Ntz;Lk; Nehd;G rNfhjuj;Jtj;ijAk;> md;igAk;> ,iw gf;jpiaAk;> nghWikiaAk;> rKjha Neu;ikiaAk;gpwu; eyd; NgZk; jd;ikiaAk;> kd cWjpiaAk; Vw;gLj;Jfpd;wJ.

5. `[; (kf;fhTf;F Gdpj ahj;jpiu nry;tJ)
nghUshjhu trjpAk; Njf MNuhf;fpaKk; cs;s xUtu; `[; flikia jkJ tho;ehspy; xU KiwahtJ fl;lhakhf epiwNtw;w Ntz;Lk; cyf K];ypk;fs; vy;NyhUk; xd;W $Lk; tUlhe;jpu khehlhd ,jpy; gy;NtW ehl;ltUk;> gy;NtW epwj;jtUk; xd;W $b XUtNuhnlhUtu; mwpKfkhfpf;nfhs;fpd;wdu;. jkJ> nghJ> gpur;ridfisAk; rKjha gpur;ridfisAk; gwpkhwpf;nfhs;fpd;wdu; rKjhaj;jpd; NjitfisAk;. nghJ eyd;fisAk; Nkk;gLj;Jtjw;fhd top Kiwfisg;gw;wp fye;JiuahLfpd;wdu;. Gdpj `[; gazk; ru;tNjr K];ypk;fspd; xw;WikiaAk; rKjha rkj;JtjijAk; xUikg;ghl;ilAk; vLj;Jf;fhl;Lk; xU kfj;jhd nghJf;$l;lkhFk;.

egp (]y;) mtu;fs; $wpAs;shu;fs; 'vy;yhf;Foe;ijfSk; ,];yhj;jpNyNa gpwf;fpd;wdu;. vdpDk; mtu;fspd; ngw;Nwhu;fs; mtu;fis fpwp];jtuhfNth> A+ju;fshfNth> n[huh];bauhfNth khw;wp tpLfpd;wdu;
(Gfhup> K];ypk;)

,];yhk; khu;f;fk; Ie;J mk;rq;fspd; kPJ epWtg;gl;Ls;sJ. mit

1. tzf;fj;jpw;Fj; jFjpahdtd; my;yh`;itad;wp NtW ahUkpy;iy. Kfk;kj; (]y;)mtu;fs; my;yh`;tpd; J}juhthu;fs;. vd;W cWjpahf ek;Gjy;.
2.Iq;fhyj; njhOifia epiy ehl;ly;
3. ]fhj; toq;Fjy;.
4. f/gh vd;Dk; ,iw ,y;yk; nrd;W `[; nra;jy;.
5;. ukohd; khjk; Nehd;G Nehw;gJ.

egp (]y;) mtu;fs; $wpAs;sjhf mg;Jy;yh`; ,g;D cku; (uyp) mwptpj;Js;shu;fs; (Gfhup> K];ypk;)

நன்றி: தமிழ்இஸ்லாம்.காம்

வெள்ளி, 23 நவம்பர், 2012



ஆஷுரா நோன்பு (முஹர்ரம் மாத நோன்பு)


அன்புடயோர் அஸ்ஸலாமு அலைக்கும்.

ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா(அலை) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப்பிளந்து பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும். அதற்கு நன்றி செலுத்தி மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதை பின்பற்றி நபி(ஸல்) அவர்களும் நோன்பு நோற்றார்கள். தன் தோழர்களையும் நோற்கும்படி ஏவினார்கள். அதை நாமும் பின்பற்றி அந்த நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.

 யூதர்களுக்கு மாறுசெய்வதற்காக ஒன்பதாம் நாளையும் சேர்த்துக் கொள்வது சுன்னத்தாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் ஒன்பது மற்றும் பத்தாம் நாட்களில் நோன்பு நோற்பது சுன்னத்தும் அதிகம் நன்மையை ஈட்டித்தரும் அமலுமாகும். இந்த நோன்பை நோற்பவரின் முன் சென்ற வருடத்தின் சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்.  இது சம்மந்தமான ஹதீதுகள் பின்வருமாறு.

ஆஷுரா நோன்பின் சிறப்புகள்: 

1. ஆஷுரா நோன்பு பற்றி இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, இந்த நாளை (ஆஷுரா தினத்தை) தவிர வேறு எந்த நாளிலும் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் சிறப்பாக தேடியதாக நான் அறியவில்லை. இந்த மாதத்தை (ரமளான் மாதம்) தவிர வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் சிறப்பாக தேடியதாக நான் அறியவில்லை என அப்துல்லாஹ் இப்னு அபீ யஸீது அவர்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

இன்னும் ஒரு அறிவிப்பில்: ஆஷுரா நாள் நோன்பின் சிறப்பை தேடியது போன்று வேறு எந்த நாட்களின் நோன்பின் சிறப்பை நபி(ஸல்) அவர்கள் தேடியதை நான் பார்க்கவில்லை என அப்துல்லாஹ் இப்னு அபீ யஸீது அவர்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

2. ஆஷுரா நோன்பு அதற்கு முந்திய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என நான் நான் கருதுகிறேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) 3. ரமளானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

 குறிப்பு: மேற்கூறப்பட்ட ஹதீதில், முன் சென்ற வருடத்தின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது சிறு பாவங்களையே குறிக்கும். பெரும்பாவங்களுக்காக தவ்பா செய்வது அவசியமாகும். இதுவே அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும்.

ஆஷுரா நோன்பு நோற்பது பற்றி ஆர்வமூட்டும் ஹதீதுகள்: 

1, நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்றிருப்பதை பார்த்து, இது என்ன? என வினவினார்கள். அதற்கு அவர்கள், மூஸா(அலை) அவர்களையும் பனூ இஸ்ரவேலர்களையும் அவர்களின் பகைவன் (ஃபிர்அவ்னிடமிருந்து) அல்லாஹ் காப்பாற்றிய ஒரு நல்ல நாளாகும் என்றார்கள், (அதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் அந்த நாளில் நோன்பு நோற்றார்கள். உங்களைவிட மூஸா(அலை) அவர்கள் விஷயத்தில் நான் மிக தகுதியுடையவர் எனக்கூறி தானும் அந்த நோன்பை நோற்று அந்த நோன்பை நோற்கும்படி (தன் தேழார்களுக்கும்) ஏவினார்கள். (புகாரி, முஸ்லிம்) இன்னும் ஒரு அறிவிப்பில்: (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்தி மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள் நாங்களும் நோன்பு நோற்போம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இன்னும் ஒரு அறிவிப்பில்: அந்த நாளை கண்ணியப்படுத்துவதற்காக நாம் நோன்பு நோற்போம் என்றார்கள்.

2. நபி(ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தின் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி யார் நோன்பாளியாக காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பை தொடரட்டும், யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் இன்றைய தினத்தின் மீதியுள்ள நேரத்தை உண்ணாமல் இருக்கட்டும் என அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன்பின் நோன்பு வைக்கலானோம். எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். இன்னும் நாங்கள் பள்ளிக்கும் செல்வோம், கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம். அவர்களில் யாரும் அழுதால் நோன்பு திறக்கும் வரை அந்த விளையாட்டுப் பொருளை அவர்களுக்காக கொடுப்போம். (புகாரி, முஸ்லிம்)

இன்னும் ஒரு அறிவிப்பில்: அவர்கள் எங்களிடம் உணவு கேட்டால் அவர்களின் நோன்பை முழுமைபடுத்தும் வரை அவர்களின் பசியை போக்கும் அளவிற்கு அவர்களுக்கு அந்த விளையாட்டுப் பொருளை கொடுப்போம் என்று வந்திருக்கின்றது.

3. அஸ்லம் என்னும் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மனிதருக்கு நபி(ஸல்) அவர்கள் (பின்வரும் அறிவிப்பை) மக்ககளுக்கு அறிவிக்கும்படி கூறினார்கள், யாராவது உணவு சாப்பிட்டிருந்தால் மீதியுள்ள நேரத்தை உண்ணாமல் இருக்கட்டும். யாராவது (இதுவரை) உண்ணவில்லையானால் அவர் நோன்பை நோற்கட்டும் காரணம் இன்றைய தினம் ஆஷுரா தினமாகும். (புகாரி, முஸ்லிம்)

4. ஆஷுரா தினம் யூதர்கள் கண்ணியப்படுத்தும் தினமாகவும் பெருநாளாக கொண்டாடும் தினமாகவும் இருந்தது, ஆகவே! நீங்கள் அந்த நாளில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) முஸ்லிமின் இன்னும் ஒரு அறிவிப்பில்: கைபர் வாசிகள் (யூதர்கள்) ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள், அதை பெருநாள் தினமாகவும் கொண்டாடுவார்கள். அவர்களின் பெண்களுக்கு ஆபரணங்களையும் அழகிய ஆடைகளையும் அணிவிப்பார்கள். ஆகவே! நீங்கள் அந்த நாளில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

ரமளான் மாத நோன்பு கடமையாக்கப்பட்ட பின் ஆஷுரா நோன்பு பற்றிய நிலை:

1. ரமளான் (நோன்பிற்கு) முன் ஆஷுரா நோன்பு (அவசியமாக) நோற்கப்படக்கூடிய ஒன்றாக இருந்தது. ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது விரும்பியவர்கள் அதை நோற்றார்கள். விரும்பியவர்கள் அதை விட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)

2. ஜாஹிலிய்யா காலத்து மக்கள் ஆஷுரா நோன்பை நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது விரும்பியவர்கள் அதை நோற்றார்கள் விரும்பியவர்கள் அதை விட்டார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். (புகாரி)

3. ஜாஹிலிய்யா காலத்து மக்கள் ஆஷுரா நோன்பை நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் ரமளானுடைய நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் அதை நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், ஆஷுரா தினம் அல்லாஹ்வின் நாட்களில் ஒரு நாளாகும், விரும்பியவர் அதை நோற்கட்டும் விரும்பியவர் அதை விடட்டும் என்றார்கள். (முஸ்லிம்)

4. ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் குறைஷிகள் ஆஷுரா நோன்பை நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள், அன்றைய தினம் கஃபாவிற்கு திரையிடப்படும் தினமாக இருந்தது. (புகாரி)

5. இது ஆஷுரா தினமாகும், உங்களுக்கு அல்லாஹ் அந்த நோன்பை கடமையாக்கவில்லை, நான் நோன்பு நோற்றிருக்கின்றேன். விரும்பியவர் நோன்பு நோற்கட்டும் விரும்பியவர் நோன்பை விடட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என முஆவியா(ரலி) அவர்கள் கூறிய செய்தியை ஹுமைத் இப்னு அப்துர்ரஹ்மான் அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

6. ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் ஆஷுரா நோன்பை நாங்கள் நோற்கும்படி நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏவுவார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது அவர்கள் அதை ஏவவுமில்லை தடுக்கவுமில்லை நாங்கள் அதை நோற்றுக் கொண்டிருந்தோம் என கைஸ் இப்னு ஸஃது இப்னு உபாதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்)

குறிப்பு: மேற்கூறப்பட்ட ஹதீதுகளிலிருந்து விளங்கக்கிடைக்கும் விஷயம், ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் ஆஷுரா நோன்பு நோற்பது அவசியமான ஒன்றாக இருந்தது. ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் அவசியம் என்பதுதான் எடுபட்டதே தவிர அது நோற்பது சுன்னா என்பது எடுபடவில்லை, நபி(ஸல்) அவர்கள் ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் ஆஷுரா நோன்பை விட்டுவிட்டார்கள் என்பதின் கருத்து, அது அவசியம் என்பதைத் தவிர அது சுன்னத்து என்பதையல்ல. அது இன்னமும் தரிபட்டதாக இருக்கின்றது என இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் பத்ஹுல்பாரி என்னும் தனது நூலில் குறிப்பிடுகின்றார்கள்.

 பத்தாம் நாளோடு சேர்த்து ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்

1. அடுத்த வருடம் நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாம் நாளையும் நோற்பேன் என்றார்கள். (முஸ்லிம்)

2. ஆஷுரா தினத்தன்று நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோக்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)

3. ஆஷுரா நாளின் நோன்பை நோருங்கள் அதற்கு முன் ஒருநாள் அல்லது அதற்கு பின் ஒருநாள் நோன்பு நோற்று யூதர்களுக்கு மாறும் செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்னறார்கள். (அஹ்மத், இப்னு குஸைமா, பைஹகி) வரிசை எண் 3-ஆம் ஹதீது மேற்கூறப்பட்ட கிரந்தங்களிலும் இன்னும் பல கிரந்தங்களிலும் பதியப்பட்டிருந்தாலும் இந்த ஹதீது பலவீனமானதாகும். இதில் முஹம்மத் இப்னு அப்துர்ரஹ்மான என்பவர் இடம் பெற்றிருக்கின்றார் இவர் கடுமையான மனனக் குறையுள்ளவரும் இவர்பற்றி அஹ்மத் இப்ன் ஹன்பல் மற்றும் யஹ்யா இப்னு மஈன் அவர்களும் இவரை பலவீனர் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இன்னும் தாவூத் இப்னு அலி என்பவரும் இந்த அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறுகின்றார் அவரை தஹபி இமாம் அவர்கள் இவருடைய ஹதீதை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது எனக்கூறுகின்றார்கள். ஆகவே ஆதாரப்பூர்வமான ”எதிர்வரும் வருடம் நான் இருந்தால் ஒன்பதையும் சேர்த்து நோற்பேன்” என்ற ஹதீதை ஆதாரமாக வைத்து ஒன்பதாம் நாளையும் பத்தாம் நாளையும் நோன்பு நோற்பதே சிறந்த முறையாகும்.

அல்லாஹ் மிக நன்கறிந்தவன். முஹர்ரம் மாதத்தின் ஒன்பதாம் மற்றும் பத்தாம் நாட்களில் நோன்பு நோற்பது மாத்திரமே நபி(ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தந்த வழிமுறையாகும். அதையே முன்சென்ற நபிமொழிகளில் பார்த்தோம். இதை தவிர்த்து அன்றைய தினத்தில் விஷேச வணக்கங்கள் புரிவது மற்றும் உணவுப்பண்டங்கள் செய்து ஏழைகளுக்கு தர்மமாக கொடுப்பது பள்ளிவாசல்களுக்கு அனுப்புவது போன்ற காரியங்கள் அனைத்தும் பித்அத்தாகும். அதே போன்று ஷீஆக்கள் அன்றைய தினத்தை துக்க தினமாக கொண்டாடுவதும் பித்அத்தாகும். இவைகள் அனைத்தையும் தவிர்த்து நபிவழி பேணுவோமாக! நன்றி

நன்றி: இஸ்லாம் கல்வி .கம்

வியாழன், 22 நவம்பர், 2012



நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள் 



cwtpduJ ,y;yk;..> cwtpdNuhL mtH Ngrpf; nfhz;bUf;Fk; nghOJ mq;Fs;s rhg;ghl;L Nki[apy; ,Uf;Fk; jl;il vLj;J Foe;ij tpisahl Muk;gpf;fpd;wJ. mg;nghOJ je;ijf;Fk; Foe;ijf;Fk; ,ilNa eilngWk; rpW Nghuhl;lk;..>

N`a;.. mijj; njhlhNj..! vd;W $wp tpl;L je;ij cwtpdNuhL Ngrpf; nfhz;bUg;gjpy; Kk;Kukhfp tpLfpd;whH.

gpd;dH rw;W Neuk; fopj;Jg; ghHf;fpd;whH..> Foe;ij kPz;Lk; me;j jl;Lfis ifapy; vLj;Jf; nfhs;fpd;wJ..> kWgbAk;..> N`a; mijj; njhlhNj..> vLf;fhNjd;D nrhy;Nwd;y..>

kPz;Lk; je;ij cwtpdNuhL Ngr;irj; njhlHfpd;whH..> rw;W Neuk; fopj;J jpUk;gpg; ghHf;fpd;whH..> kPz;Lk; me;jf; Foe;ij mijNa jhd; nra;J nfhz;bUf;fpd;wJ.

je;ij mjidg; ghHj;J vJTNk nrhy;yhky; kPz;Lk; Ngr;rpy; Kk;Kukhfp tpLfpd;whH.
,JNt gy re;jHg;gq;fspy; eilngwf; $ba epfo;Tfs;..! Foe;ijfSf;F cj;jutpl KbAk;> mtHfs; mjidf; Nfl;fhj nghOJ> kPz;Lk; mNj cj;juit ,l;Lf; nfhz;Nl ,uhky;> Foe;ijiaf; fz;L nfhs;shky; ,Ue;J tpl Ntz;Lk;.

,J khjphpahd #o;epiyfs; ngw;NwhHfs; vd;d nra;a Ntz;Lk;?

rpyH mijj; jLj;J epWj;j Ntz;Lk;> rpyH mbf;f Ntz;Lk;> rpyH mJ Foe;ij jhNd vd;W tpl;L tpl Ntz;Lk;> Foe;ijaplk; mjpfk; vjpHghHf;f KbahJ vd;Wk; $WthHfs;.

cz;ikapy; ey;nyhOf;fKs;s Foe;ijfis cUthf;Ftjw;F ngw;NwhHfs; Kaw;rp nra;a Ntz;Lk;> ,JNt r%fj;;jpd; vjpHghHg;GkhFk;.
ngw;NwhHfisg; nghWj;jtiu xt;nthUtUf;Fk; xt;nthU Nehf;fk; ,Uf;Fk;> Fzhjpraq;fs; ,Uf;Fk;. ,Ug;gpDk;> Foe;ijfis ,g;gbj; jhd; elj;j Ntz;Lk; vd;w nghJthdnjhU topKiw ,Uf;fpd;wJ. 

mjidg; gpd;gw;wpdhy; xOf;fKs;s Foe;ijfis cUthf;f KbAk;. ehk; epidj;jkhjpnay;yhk; Foe;ijfis tsHj;J tpl KbahJ. jpl;lkpl;l mbg;gilapy; mtHfis topelj;Jk; nghOJ> ey;ygy tpisTfs; Vw;gLk;.

1. ,sikapy; fy;tp
,e;j tajpy; mjw;F vd;d njhpAk; vd;W mq;fyha;g;gtHfisf; fhz KbAk;> Mdhy; Foe;ijfspy; ,sikg; gUtk; jhd; mitfs; fw;Wf; nfhs;sf; $ba ey;ynjhU gUtkhFk;> mtHfis ey;ynjhU topj;jlj;jpd; fPo; gazpg;gJ vg;gb vd;gij ngw;NwhHfs; fw;Wf; nfhLf;f Ntz;ba jUzk;> Foe;ijfspd; Muk;g ehl;fshFk;. xUKiw mtHfspilNa ey;ynjhU gz;ghl;il gof;f tof;fq;fis Vw;gLj;jp tpl;lhy;> mJ mtHfsJ tho;ehs; KOtJk; njhlUk;> mjpypUe;J mtHfs; khw khl;lhHfs;.

2. Nfhgkhd epiyapy; Foe;ijfSf;F cj;jutplhjPHfs;
ePq;fs; cq;fsJ Foe;ijaplNdh my;yJ rhjhuzkhf vjw;fhfNth ePq;fs; Nfhgkhd epiyapy; ,Ue;J nfhz;bUf;fpd;wPHfs;. mg;nghOJ cq;fsJ Foe;ijfisj; jpUj;j epidf;fhjPHfs;. cq;fsJ Foe;ijf;F ey;yijj; jhd; ehLfpd;wPHfs;. Mdhy; mJty;y ,g;NghJ gpur;id..> ePq;fs; ve;j epiyapy; mjidr; nrhy;fpd;wPHfs; vd;gJ jhd; gpur;id. vdNt> Nfhgk; ,y;yhj epiyapy; mjidj; njhlUq;fs;.

3. ngw;NwhHfs; ,ize;J KbntLj;Jr; nray;gLq;fs;
Foe;ijfis vt;thW newpg;gLj;JtJ vd;gJ Fwpj;j jpl;lj;ij FLk;gj;jiytpAk;> jiytDk; ,ize;J jPHkhdpf;f Ntz;Lk;. mjid ,UtUk; ,ize;J epiwNtw;Wtjw;F jpl;lkply; Ntz;Lk;. xUtH fwhuhfTk;> ,d;ndhUtH ,yFthfTk; ele;J nfhz;lhy;> ,UtUf;F kj;jpapy; Foe;ijfs; tpisahl Muk;gpj;J tpLk;. ngw;NwhHfspy; fwhuhdtH kWf;fpd;w nghOJ> mLj;jthplk; nrd;W mDkjp Nfl;f Muk;gpj;J tpLthHfs;. ,UtUk; xU tpraj;jpy; xj;j fUj;jpy; ,Ue;jhy; jhd; Foe;ijfis newpg;gLj;j KbAk;. 

ngw;NwhHfspy; xUtH rk;kjpj;J ,d;ndhUtH rk;kjpf;fh tpl;lhy;> ngw;Nwhhpy; xUthpd; kPJ Foe;ijfSf;F ntWg;GzHT Vw;gLk;. vdNt> ,J tprakhf ehq;fs; fye;Njhyrpj;J KbT nrhy;fpd;Nwhk; vd;W Foe;ijf;Ff; $Wq;fs;. gpd;dH> Foe;ijfs; ,y;yhj #o;epiyfspy; me;j tptfhuj;ij fye;jhNyhrpj;J KbntLq;fs;. Foe;ijfis itj;Jf; nfhz;L fye;jhNyhridapy; <LglhjPHfs;. vLj;j Kbtpy; ,UtUk; cWjpahf ,Uq;fs;.

4. cWjpahf ,Uj;jy;
ngw;NwhHfs; jq;fsJ nfhs;iffspy; cWjpiaf; filgpbf;f Ntz;Lk;. mbf;fb rl;l jpl;lq;fis kw;Wk; vjpHghHg;Gfis khw;wpf; nfhs;tJ Foe;ijfis Fog;gj;jpy; Mo;j;jp tpLk;. cjhuzkhf> Rthpy; vOjpf; nfhz;bUf;fpd;w Foe;ijia ,d;iwf;F jLg;gJ> ehisf;F jLf;fhJ vOjl;Lk; vd mDkjpg;gJ> ,g;gbg;gl;l #o;epiyfspy; ,dptUk; ehspy; ehk; Rtw;wpy; vOjpdhy; ngw;NwhHfs; fz;bg;ghHfsh> Nfhgg;gLthHfsh vd;w Ghpe;JzHtpd;ik Foe;ijfsplj;jpy; Njhd;wp tpLk;. 

cq;fsJ kdepiyf;Fj; jf;fthW cq;fsJ rl;l jpl;lq;fisAk; khw;wpf; nfhs;tJ ey;yjy;y. ,t;thwhd epiyapy;> ve;jf; fhhpaj;ijNaDk; Foe;ij nra;a Muk;gpf;Fk; nghOJ> ePq;fs; mjid mDkjpg;gPHfsh khl;BHfsh> mjdhy; NfhgkiltPHfsh vd;W cq;fisg; ghpNrhjid nra;a Muk;gpj;J tpLk;. vdNt jhd; $Wfpd;Nwhk;..> Foe;ijfis xU tpraj;jpd; kPJ mjidr; nra;ahNj vd;W jLj;jhy;> me;jj; jil vg;nghOJk; ePbf;f Ntz;Lk;. mg;nghOJ jhd; X..> ,ijr; nra;tJ ey;yjy;y vd;W me;jf; Foe;ij clNd fw;Wf; nfhs;Sk;.

mg;gbnad;why; rka re;jHg;gq;fSf;Fj; jf;fthW ek;ik khw;wpf; nfhs;sf; $lhjh vd;why;> khw;wpf; nfhs;syhk;..> ePq;fs; Vd; Kjypy; mDkjp kWj;jPHfs;..> gpd;dH ,g;nghOJ Vd; ePq;fs; mDkjpf;fpd;wPHfs; vd;gJ Fwpj;J me;jf; Foe;ijf;F tpsf;fk; mspf;f Ntz;baJ mtrpakhFk;. ,d;Dk; mjid mjd; Muk;g fl;lj;jpNyNa tpsf;fp tpLtJ Ghpe;JzHTf;F ey;yjhFk;. ngw;NwhHfsplk; cWjp ,y;iy vd;why;> mJNt Foe;ijfspd; fl;Lg;ghbd;ikf;fhd Mzp NtuhFk;.

5. Foe;ijfsplk; ngha; NgrhjPHfs;
gps;isfsplk; jg;gpg;gjw;fhf tha;g;ghf ngha;iag; NgrhjPHfs;> mtHfsplk; toq;ff; $ba thf;FWjpfis epiwNtw;Wq;fs;. ePq;fs; mbf;fb ngha; Ngrf; $ba ngw;Nwhuhf ,Ue;jhy;..> mtHfs; cq;fsJ thHj;ijf;F kjpg;Gf; nfhLf;f khl;lhHfs;> ePq;fs; cz;ikiaNa NgrpdhYk; $l mtHfs; ek;g khl;lhHfs;.

cjhuzkhf> caukhd mykhhpapy; cs;s nghUs; xd;iw cq;fsJ Foe;ij vLj;Jf; nfhz;bUf;fpd;wJ. mjid Kiwahf vLf;f mjdhy; ,ayhJ..> vDk; nghOJ rw;W nghW.. ,Njh vd;Dila Ntiyfis Kbj;J tpl;L te;J vLj;Jj; jUfpd;Nwd; vd;W ePq;fs; $Wfpd;wPHfs;. mt;thW $wp tpl;lhy; ePq;fs; cq;fsJ Ntiyfis clNd Kbj;Jf; 
nfhz;L cq;fsJ Foe;ijf;F cjTq;fs;.

kwf;f Ntz;lhk;..! ePq;fs; $wpaij epiwNtw;w Ntz;Lk;. mt;thwpy;iy vd;why; me;jf; Foe;ij kPz;Lk; mykhhpapy; cs;s nghUis vLf;f KidAk;. mjdhy; ,ayhj epiyapy;> nghUl;fs; jtwpf; fPNo tpOe;j gpd;G me;jf; Foe;ijia Nfhgpj;Jg; gad; vd;d? xd;W> mjid ,g;nghOJ vLf;f ,ayhJ. kw;w Ntiyfisg; ghUq;fs;> gpd;G vLj;Jf; nfhs;syhk; vd;W ePq;fs; $wp ,Ue;jhy;> me;jf; Foe;ij jd;Dila Kaw;rpiaf; iftpl;L tpl;L NtW Ntiyapd; gf;fk; jdJ ftdj;ijj; jpUg;gp ,Uf;Fk;. Mdhy;> rw;W nghW..> vd;W ePq;fs; $wpa gpd;G.. rw;Wf; fhj;jpUe;J tpl;L ePq;fs; tujjhy; me;jf; Foe;ij Kaw;rp nra;J ghHj;jpUf;fpd;wJ.

jtW cq;fs; kPJ..> Foe;ijapd; kPjy;y. ePq;fs; mbf;fb ,g;gb ele;J nfhs;gtH vd;why; gpd;G ePq;fs; rPhpa]hf vjidr; nrhd;dhYk;> mjid xU nghUl;lhfNt Foe;ij vLj;Jf; nfhs;shJ vd;gij Qhgfj;jpy; itj;Jf; nfhs;Sq;fs;.
gpd;G xU fhhpaj;ijr; nra;a Muk;gpf;Fk; nghOJ cq;fsJ Fzk; vt;thW khWk;> Nfhgpg;gPHfsh> khl;BHfsh vd;W cq;fisNa ghpNrhjpf;f Muk;gpj;J tpLk;.

6. mlk; gpbj;J mOfpd;wjh..> tpl;L tpLq;fs;
Foe;ij mlk; gpbj;J mOfpd;wjh..> mit vijNah cq;fsplk; vjpHghHf;fpd;wd..! mt;thW mOk; Foe;ijapd; mOifia epWj;Jtjw;F vijAk; nfhLj;J rkhjhdg;gLj;jhjPHfs;. gpd;dH xt;nthU KiwAk; mJ tpUk;Gtijg; ngWtjw;F mo Muk;gpj;J tpLk;. moifapd; %ykhf vjidAk; ngw KbahJ vd;gjid mJ mwpe;J nfhs;s Ntz;Lk;. vt;tsT jhd; mOjhYk;.. rhpNa..> tpl;L tpLq;fs;.

moj; njhlq;fp tpl;lhy; mdHj;jk; jhd; vd;fpwPHfsh..> nghWik kpfTk; mtrpak;. vg;nghOJ me;jf; Foe;ij mOifapdhy; vijAk; rhjpf;f KbahJ vd;gijf; fw;Wf; nfhz;L tpl;lNjh> tho;Nt re;Njh\k; jhd;. rpy ehs; nghWik..> tho;Nt ,dpik. NjHT cq;fsJ ifapy;..!

7. jtwpioj;jhy; kd;dpg;G Nfl;f Ntz;Lk; vd;gijf; fw;Wf; nfhLq;fs;
jtwpiof;ff; $baJ kdpjdpd; Rghtk;. jtwpiog;gtHfs; kd;dpg;Gf; Nfl;f Ntz;Lk; vd;gJ ,iwtdpd; fl;lisAkhFk;> mJ rf kdpjDf;Fr; nra;af; $ba jtwhf ,Ug;gpDk; rhp..> my;yJ ,iwtDf;F khW nra;af; $ba ghtq;fshf ,Ue;jhYk; rhpNa..! kd;dpg;Gf; Nfhu Ntz;Lk; vd;gij Foe;ijfs; fw;Wf; nfhs;Sk; nghOJ> jtwpiof;f NeUk; nghOJ kd;dpg;Gf; Nfhu Ntz;Lk; vd;w czHT mtHfsplk; kpFe;J fhzg;gLk;.

8. kd;dpj;J tpLq;fs;
Foe;ij jtW nra;J tpl;lJ> mjid czHe;J jdJ jtWf;fhf tUj;jk; njhptpf;fpd;wJ> clNd mjid kd;dpj;J kwe;J tpLq;fs;> kd;dpj;J tpl;Nld; vd;gij NeubahfNt Foe;ijaplk; nrhy;Yq;fs;> ePq;fs; nra;Ak; jtWfis my;yh`; kd;dpg;gjpy;iyah..> mjidg; Nghy jtwpioj;j Foe;ij kd;dpg;Gf; Nfl;gNj mJ rhpahd ghijapy; gazpf;fpd;wJ vd;gij czHe;J nfhs;Sq;fs;.

my;yh`; kd;dpg;Nghdhf ,Uf;fpd;whd;> kd;dpg;ig tpUk;Gfpd;whd;..> vdNt ePq;fSk; Foe;ij nra;Ak; jtWfSf;fhf clNd gpuk;igj; J}f;fhjPHfs;. mtHfs; kd;dpg;Gf; Nfhhpdhy; kd;dpj;J tpLq;fs;> ,d;Dk; ehd; cd;id kpfTk; Nerpf;fpd;Nwd; vd;gij mbf;fb mtHfsplk; $wp thUq;fs;> mJ cq;fsJ cs;sj;jpy; ,Ue;J tu Ntz;Lk;. ,jd; fhuzkhf ngw;NwhH gps;isfs; cwT NkYk; tYtilAk;.

9. cq;fsJ jtWf;Fk; kd;dpg;Gf; NfhUq;fs;
ePq;fs; jtwpioj;J tpl;BHfs;> ehd; ngw;wtd;> gps;isfsplk; vg;gb kd;dpg;Gf; Nfl;gJ vd;W ,Wkhg;Gf; nfhs;shjPHfs;.

jtwpiof;fg;gl;ltHfs; ahuhf ,Ue;jhYk; rhpNa..> ek;Kila Foe;ijahf ,Ue;jhYk; rhpNa..> kd;dpg;Gf; NfhUq;fs;> mJNt ePjpf;Fr; rhl;rpak; gfHtjhFk;. mt;thW ePq;fs; kd;dpg;Gf;Nfhutpy;iy vd;why;> mJNt mlf;FKiwapd; Muk;gkhFk;.

10. ,sikapNyNa ,];yhj;ij mwpKfg;gLj;Jq;fs;
rpWgpuhaj;jpypUe;J mtHfSf;F my;yh`;> ,iwek;gpf;if> egpkhHfs;> egpj;NjhoHfs;> egpj;NjhopaHfs; kw;Wk; khHf;f mwpQHfs;> khngUk; jiytHfs; MfpNahuJ tho;f;if tuyhw;iw rpW rpW rk;gtq;fshf mtHfSf;Fr; nrhy;yp thUq;fs;. mJ Nghd;wnjhU cd;dj tho;f;iff;F Mirg;gLk;gb mwpTWj;Jq;fs;.

,iwj;J}jH (]y;)mtHfsJ tho;f;ifapy; eilngw;w rk;gtq;fs;> mG+gf;fH (uyp)> ckH (uyp)> cJkhd; (uyp)> myp (uyp) kw;Wk; NeHtop ngw;w egpj;NjhoHfs; gw;wpa rk;gq;fs; Foe;ijfspd; cs;sj;ij gz;gLj;j ty;yJ.

mtHfs; topjtWk; nghOnjy;yhk; Nkw;fz;l rk;gtq;fs; mtHfis gz;gLj;jg; gad;gLk;. ,];yhj;jpy; cWjpahf ,Ug;gjw;F topaikf;Fk;.

,d;iwf;F ek; Foe;ijfs; rf;jpkhd;> ,uhkhazk;> kfhghujk; Nghd;w fijfs; kw;Wk; tuyhw;Wj; njhlHfshy; ghjpf;fg;gLfpd;wd. mtHfisg; Nghy mkhD\;akhd tho;f;ifia> gof;f tof;fq;fis gpd;gw;wp tho Ntz;Lk; vd;W fdT fhz;fpd;wd. mjdhy; jhd; khbapypUe;J Fjpj;J rf;jpkhd; Nghy rfhrk; nra;ag; ghHf;fpd;wd. rf;jpkhd; te;J fhg;ghw;wp tpLthH vd;w ek;gpf;if jhd; mtHfis khbapypUe;J Fjpf;f itf;fpd;wJ. ,J Nghd;w fijfis tpl..> ,];yhkpa tuyhw;W ehafHfspd; cz;ik tho;T gbg;gpid kpf;fjhFk;. ,d;Dk; ePq;fSk; $l mtHfspd; tuyhw;wpypUe;J gbg;gpid ngw;Wf; nfhs;syhk;.

11. ey;nyhOf;fq;fisf; fw;Wf; nfhLq;fs;
cq;fsJ Foe;ijfSf;F ey;nyhOf;f Nghjidfs; mtrpak;. xOf;fk; rhHe;j ,];yhkpa E}y;fs; Vuhskhf ,Uf;fpd;wd. mtw;wpid mtHfSf;F ghprspAq;fs;.

,g;nghOJ gs;sp Mz;L tpohf;fs; vd;W $wpf; nfhz;L rpdpkhg; ghly;fSf;F MLk; fyhr;rhuj;ijg; gs;spf; $lq;fspy; fw;Wf; nfhLf;fpd;whHfs;. rpdpkhf;fspy; fjhehafDk;> fjhehafpAk; fl;bg;gpbj;J Mbg;ghLk; mrpq;fkhd mq;f mirTfis Foe;ijfSf;F fw;Wf; nfhLj;J> ,t;thwhd tpohf;fspy; Ml itj;J ngw;wtHfSk;> kw;wtHfSk; urpf;fpd;whHfs;.

,jid K];ypk; ngw;NwhHfs; Cf;fg;gLj;jf; $lhJ. mt;thwhd Nghl;bfs; jtpHj;J Vida fl;Liug; Nghl;bfs;> Ngr;Rg; Nghl;bfs; Nghd;wtw;wpy; fye;J nfhs;s Cf;fg;gLj;Jq;fs;.

12. fPo;g;gbjy;
ngw;NwhHfSf;Ff; fPo;gbjy; vd;gJ ,iwtd; Foe;ijfs; kPJ flikahf;fpanjhd;W. jhAk;> je;ijAk; ,ize;J ,jw;fhd gapw;rpia toq;f Ntz;Lk;. Mdhy; FLk;gq;fspy; elg;gJ NtW..!
je;ijia fub Nghy gps;isfsplk; mwpKfg;gLj;JtJ..> mjhtJ..> mg;gh tul;Lk;..> cd;id vd;d nra;fpNwd; ghH.. vd;W gps;isfis kpul;LtJ jha;khHfsJ thbf;if. ,J jtwhd topKiw..!

KjyhtJ> vg;nghOJ Foe;ij fPo;g;gbahikiaf; fhl;Lfpd;wNjh mg;nghONj fPo;g;gbtJ vg;gb vd;gijf; fw;Wf; nfhLf;fg;gl Ntz;Lk;. jhkjg;gLj;jf; $lhJ. jhkjg;gLj;Jk; nghOJ xd;W me;j rk;gtj;ijNa Foe;ij kwe;jpUf;Fk; epiyapy;> mtHfisj; jz;bf;Fk; nghOJ jhd; vjw;fhf jz;bf;fg;gLfpd;Nwhk; vd;gJ mjw;F tpsq;fhJ.

,uz;lhtJ> me;jj; jtiw eptHj;jp nra;tjw;fhd re;jHg;gk; mjw;Ff; nfhLf;fg;gl;bUf;f Ntz;Lk;> Foe;ijAk; jtiw czHe;J jpUe;jpapUf;Fk;> Foe;ijiaj; jpUj;Jtjw;F je;ij jhd; tu Ntz;Lk; vd;W jha; fhj;jpUf;f Ntz;bajpy;iy. ,jd; %yk; jhNah my;yJ je;ijNah Foe;ijapd; jtiwj; jpUj;j KidAk; nghOJ> ,UtuJ nrhy;Yf;Fk; mJ fl;Lg;gl;L elf;Fk; gof;fk; mjdplk; Vw;gLk;.

%d;whtjhf> ngw;NwhHfspy; ahuhtJ xUtH jhd; Foe;ijapd; jtiwf; fz;bf;Fk; nghWg;G toq;fg;gl;bUg;gtH vd;w epiy tsHe;jhy;> jtiwf; fz;bf;Fk; ngw;Nwhiu Foe;ijfs; Nerpg;gjpy;iy> khwhf fz;bf;Fk; jhiaNah my;yJ je;ijiaNah mtHfs; tpy;ydhfg; ghHf;f Muk;gpj;J tpLthHfs;. ,JTk; $l Foe;ijfsplk; fPo;gbahik tsHtjw;Ff; fhuzkhfp tpLk;. ngw;NwhHfspy; ,UtuJ nrhy;Yf;Fk; fl;Lg;gl;L elf;f Ntz;Lk; vd;w epiy mtHfsplk; cUthfhJ. ngUk;ghyhd FLk;gq;fspy; ,J Nghd;w jtWfs; jhd; epfo;fpd;wd. ,J jtpHf;fg;gl Ntz;Lk;.

நன்றி: தமிழ்இஸ்லாம்.காம்